மக்களுக்கு என்ன தேவை என்ற சிந்தனையே இல்லாத ஆட்சி நடக்கிறது..! எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..!

Published by
செந்தில்குமார்

தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது என இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு போன்ற சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது என குற்றம்சாட்டியுள்ளார். சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய எடப்பாடி பழனிச்சாமி, மக்களுக்கு என்ன தேவை என்ற சிந்தனையே இல்லாத ஆட்சி தமிழகத்தில் நடப்பதாக விமர்ச்சியுள்ளார்.

அவர் பேசியதாவது, அதிமுகவில் தான் சாதாரண தொண்டன் கூட முதல்வர் அல்லது கட்சியின் உயர் பொறுப்புக்கு செல்லமுடியும், தமிழகத்தில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் எளிதாக கிடைப்பதால் கொலை, கொள்ளை, திருட்டு போன்ற சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. இவ்வாறு, நாட்டு மக்களுக்கு என்ன தேவை என்ற சிந்தனையே இல்லாத ஆட்சி நடக்கிறது என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம் என்று கூறினார்.

மேலும், சட்டம்-ஒழுங்கு சீரழிந்து தமிழ்நாடு கொலைக்களமாக மாறி வருகிறது. திமுக ஆட்சியில் மேட்டூர் உபரிநீர் திட்டப்பணிகள் மந்த நிலையில் நடக்கின்றன, என்றும் முன்னதாக திருமண மண்டபங்களில் மது பரிமாறலாம் என்ற உத்தரவை அதிமுக கண்டித்த பிறகுதான் திருமண மண்டபங்களில் மது பரிமாறுவதற்கான உத்தரவு வாபஸ் பெறப்பட்டது என்று எடப்பாடி பழனிச்சாமி சுட்டிக்காட்டினார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

INDvsENG : ‘வா வந்து பாரு’…ஆர்ச்சருக்கு அலர்ட் கொடுத்த ரிஷப் பண்ட்!

லண்டன் : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் துணைக் கேப்டனும்,…

2 minutes ago

அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது! ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், இன்று கும்பகோணத்தில் நடைபெற்ற பாட்டாளி…

48 minutes ago

பாஜகவின் ஒரிஜினல் வாய்ஸ் எடப்பாடி பழனிசாமி- முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் “மக்களைக் காப்போம், தமிழகத்தை…

1 hour ago

“படகுகளில் த.வெ.க. பெயர்.., மீனவர்களை மிரட்டும் தி.மு.க. அரசு” – விஜய் கண்டனம்.!

சென்னை : படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் மறுப்பதா? என்று அரசுக்கு விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  ஏற்கெனவே…

2 hours ago

”மதுரையில் சொத்து வரி விதிப்பதில் மிகப்பெரிய ஊழல் முறைகேடு” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.!

சென்னை : மதுரையில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

2 hours ago

திருவாரூர் அரசு நிகழ்ச்சியில் 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…

3 hours ago