9,10,11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடைபெறாது என கண்ணப்பன் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு இல்லாமல் தேர்ச்சி என அறிவித்தார்.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இன்று ஒரு சுற்றறிக்கையில் 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வை நடத்தி மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும், ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் செய்முறை தேர்வை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைத்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, 9,10,11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடைபெறாது என பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார். முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்ட அறிவிப்பை திரும்ப பெற முதன்மை கல்வி அதிகாரிக்கு கண்ணப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…