மதம் பார்ப்பவர்களுக்கு புதுக்கோட்டை ஹோட்டலில் சாப்பாடு கிடையாது !

Published by
murugan

மத்தியப்பிரதேசத்தில் இந்து மதத்தை இல்லாதவர் ஒருவர் உணவை டெலிவரி செய்ததாக கூறி அந்த உணவை ரத்து செய்த நபருக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றன.

இதற்கு பதில் அளித்த சோமாட்டோ நிறுவனம் “உணவுக்கு மதம் கிடையாது.உணவே ஒரு மதம் தான்” என கூறியுள்ளது. சோமாட்டோ நிறுவனத்தின் இந்த பதிலுக்கு பலர் ஆதரவு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து புதுக்கோட்டையில் உள்ள ஒரு ஹோட்டலில் மதம் பார்ப்பவர்களுக்கு இங்கு சாப்பாடு கிடையாது என அறிவிப்பு பலகையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்தில் மூன்று இடங்களில் ஓட்டல் மற்றும் காபி பார் நடத்தி  வரும் அருண்மொழி என்பவர் தனது ஹோட்டலில் மதம் பார்ப்பவர்களுக்கு சாப்பாடு கிடையாது என எழுதி வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இது குறித்து அருண்மொழி கூறுகையில் “ஜாதி , மதங்களுக்கு அப்பாற்பட்டது தான் உணவு. அதில் மதம் பார்ப்பவர்களுக்கு எனது ஹோட்டலில் சாப்பாடு இல்லை என விளம்பரம் செய்துள்ளேன் என கூறினார். இதனையடுத்து அருண்மொழியின் இந்த அதிரடி முடிவுக்கு பலர் தங்களது பாராட்டுக்களை கூறி வருகின்றனர்.

Published by
murugan

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

7 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

8 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

8 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

9 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

10 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

10 hours ago