திருமங்கலம்:ஒரே எண்ணில் இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்..!

Published by
Edison

திருமங்கலம் தொகுதியில் ஒரே எண்ணில் இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்ததால் வாக்கு எண்ணும் மையத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது இன்று காலை 8 மணியில் இருந்து நடைபெற்று வருகின்றன.முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு,அதன் பின்னர் மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன.

அதில்,தற்போது வரையிலான வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி திமுக 153  தொகுதிகளிலும்,அதிமுக 80 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

இந்த நிலையில்,திருமங்கலம் தொகுதி செங்கப்பட்டையில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் 132 என்ற எண் கொண்ட மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான 760 வாக்குகள் எண்ணப்பட்டு இருந்த நிலையில்,மற்றொரு இயந்திரத்திலும் 132 என்ற எண் இருந்ததால்,வாக்கு எண்ணும் மையத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே இதுபோன்ற சர்ச்சைகள் இன்று காலை முதல் சில வாக்கு எண்ணும் மையங்களில் நடந்துள்ளது.

மேலும்,திருமங்கலம் தொகுதியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் 8 வது சுற்றில் அதிமுக வேட்பாளர் ஆர்.பி.உதயகுமார்,தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் எம்.மணிமாறனை விட 661 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்து வந்தார் என்பது குறிபிடத்தக்கது.

Recent Posts

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

19 minutes ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

50 minutes ago

முதலாம் ஆண்டு நினைவு தினம்: ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் முழு உருவ சிலை திறப்பு.!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…

1 hour ago

குரோஷியாவில் நடைபெற்ற ரேபிட் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ்.!

ஐரோப்பா :  உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…

2 hours ago

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

2 hours ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

2 hours ago