thirumavalavan [Imagesource : Representative]
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அத்தைக்கு மீசை முளைத்தால், சித்தப்பா என்று அழைப்போம். அதேபோல தான் பாஜகவின் நிலை உள்ளது. பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் ஆட்சி அமைக்காது.
பாஜக ஆட்சிக்கு வராது என்பது அவருக்கே தெரியும். அதனால் தான் வாக்குறுதிகளை அள்ளி இறைக்கிறார். நாங்கள் திமுக கூட்டணியில் இருக்கிறோம். அதை தொடருவோம். இந்தியா கூட்டணியை வலுப்படுத்துவோம்.
அதிமுக தனது இடத்தை தக்க வைத்துக் கொள்வது அவசியமானது. கூட்டணி கட்சியாக இருந்துகொண்டே அதிமுகவை பலவந்தம் படுத்தும் வேலையை பாஜக செய்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக பாஜக தான் இருக்கிறது. அதிமுக இல்லை என்பதை காட்டி கொள்வதற்கான எல்லா முயற்சியையும் பாஜக செய்து வருகிறது.
உறுப்பினர்களே இல்லாத ஒரு கட்சி, ஒருநாளைக்கு பலகோடி ரூபாய் செலவு செய்யும் வகையில் நடைபயணம் மேற்கொள்கிறார்கள் என்றால், பணம் எங்கிருந்து வருகிறது. யார் தருகிறார்கள். பணம் எங்கிருந்து வருகிறது என்பதையெல்லாம் எண்ணி பார்க்க வேண்டும்.
எனவே அண்ணாமலை நடக்கும் நடைப்பயணத்தில் தொண்டர்களாக பங்கேற்க கூடியவர்கள், அதிமுக, பாமக கட்சியை சார்ந்த தொண்டர்கள் தான். அவரும் நடந்து செல்வது பாஜக தொண்டர்கள் இல்லை. இதன்மூலம் அதிமுக, பாமகவில் உள்ளவர்களை அவர்களின் கருத்தியலுக்கு ஏற்ப மாற்றி வருகிறார்கள். அதாவது பலவீனப்படுத்தி வருகிறார்கள். இது அதிமுகவுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும்.
திமுகவை எதிர்க்கும் வலிமை கொண்டதாக அதிமுக இருக்கிறது. இன்று அது பெரிய எதிர்க்கட்சியாக இருக்கிறது. அதிமுகவை விழுங்கும் வேலையை பாஜக செய்து வருகிறது. கடந்த காலங்களில் வடஇந்திய மாநிலங்களில் பாஜக கூட்டணி கட்சிகளை விழுங்கி தான், தங்களை வலிமைப்படுத்தியுள்ளர்கள் என விமர்சித்துள்ளார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…