பெண்களுக்கு எதிராக பேசிய திருமாவளவனை தமிழக அரசு ஏன் இதுவரை கைது செய்யவில்லை என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் , பெண்கள் குறித்தும், மதம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில், அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே இது குறித்து திருமாவளவன் கூறுகையில்,மனுநீதி நூல்களில் உள்ளது ,பற்றி நான் பேசியதைத் திரித்து, பொய்யைப் பரப்புகிறது வக்கிரபுத்தி கொண்ட கும்பல் என்று விளக்கம் அளித்தார். இதற்கிடையில், நேற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். திருமாவளவனுக்கு ஆதரவாகவும் ஒரு சில அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருமாவளவன் குறித்து பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறுகையில்,திருமாவளவனை உடனடியாக கைது செய்ய வேண்டும்.பெண்களுக்கு எதிராக பேசிய திருமாவளவனை தமிழக அரசு ஏன் இதுவரை கைது செய்யவில்லை. திருமாவளவனை கைது செய்யும் வரை அழுத்தம் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து : இந்தியா VS இங்கிலாந்து முதல் டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது. முதல் நாள்…
மாஸ்கோ : கடந்த ஜூன் 21-ஆம் தேதி மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் பதற்றத்தை…
மதுரை : மாவட்டத்தில் ஜூன் 22, 2025 அன்று நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாடு (முருக பக்தர்களின் ஆன்மிக மாநாடு)…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20, 2025 அன்று லீட்ஸ்…
சென்னை : சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த…
பாரிஸ் : இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா, ஜூன் 20, 2025 அன்று பாரிஸில் நடைபெற்ற…