சிபிஎஸ்இ பாடநூலில் வெளியிடப்பட்டுள்ள திருவள்ளுவர் படத்தை உடனே அகற்ற வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் திருவள்ளுவர் தலையில் முடி இல்லாமல் குடுமி வைத்து காவி உடை அணிந்து கோவில் குருக்கள் போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த புகைப்படம் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மத்திய அரசு உடனடியாக சி.பி.எஸ்.இ. பாட நூலில் வெளியிட்டுள்ள திருவள்ளுவர் படத்தை அகற்றி, தமிழக அரசு ஏற்பு அளித்த திருவள்ளுவரின் திருஉருவப் படத்தை இடம்பெறச் செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றேன் என தெரிவித்துள்ளார்.
திருவள்ளுவருக்கு தமிழகத்தின் பல இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரியில் உள்ள 133 அடி உயரமுள்ள சிலையும், சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டமும் திருவள்ளுவரின் பரைசாற்றும் விதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…
சென்னை : நாளை (ஜூலை 9, 2025) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய…
சென்னை : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு…
சென்னை : போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.…
சென்னை : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18ம்…
கடலூர் : கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை 7:40 மணியளவில் தனியார் பள்ளி வேன் ஒன்று…