இன்று 3-வது நாளாக தமிழக சட்டப்பேரவை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து, 110 – விதியின் கீழ் தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அவரது அறிவிப்பில் , திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து, விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதையடுத்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் திருவள்ளூர் பல்கலைக்கழகத்தில் இரண்டாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். காட்பாடி தொகுதியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழத்தை கருணாநிதி கொண்டு வந்ததற்காக இவ்வாறு செய்கிறீர்களா..? இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்யுங்கள் என அவர் தெரிவித்தார்.
விழுப்புரத்தில் புதிய பல்கலைக்கழகம் துவக்கி அதற்கு உங்கள் பெயரை கூட வைத்துக் கொள்ளுங்கள் அதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை, விழுப்புரத்தில் உருவாக்கப்படும் பல்கலைக்கழகத்திற்கு என்ன பெயர் வைப்பீர்கள் என துரைமுருகன் கேள்வி எழுப்பினர்.
அதற்கு முதல்வர் பல்கலைக்கழகத்தைப் பிரிப்பதற்கு ஒத்துக் கொள்ளாத நீங்கள் பெயர் வைப்பதற்கு மட்டும் ஒத்துக் கொள்வீர்களா..? பெயர் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார்.
திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…
டெல்லி : இதுவரை தேசிய நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் இலவசமாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜூலை 15,…
சென்னை : குணச்சித்திர நடிகர் ஜி.சீனிவாசன் உடல்நலக்குறைவால் சென்னையில் நெற்றிரவு காலமானார். இயக்குநர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத் திறன்…
சென்னை : போதைப்பொருள் வழக்கு தொடர்பான விசாரணையில், தமிழ் திரைப்பட நடிகர் கிருஷ்ணா மற்றும் போதைப்பொருள் சப்ளையர் எனக் கூறப்படும்…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…