திருவண்ணாமலை கிரிவலத்துக்கு 15,000 வெளியூர் பக்தர்களை அனுமதிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மலையில் ஏறி சென்று மகா தீபத்தை தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்வதற்கும் தடையை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன்படி 17ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிற்கு தமிழக அரசு பதிலளித்துள்ளது. அதன்படி இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்கள் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளியூரை சேர்ந்த 15 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கலாம் எனவும், உள்ளூர் பக்தர்கள் 5 ஆயிரம் பேரையும் அனுமதிக்கலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் கோவிலுக்குள் பக்தர்களை அனுமதிக்க வாய்ப்பில்லை எனவும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…