இந்த தேர்தலை மத சார்பின்மைக்கும், மதவாதத்திற்கும் இடையேயான தேர்தலாக பார்க்கிறோம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் சென்று முக ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், வருகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தல் என்பது 2 அணிகளுக்கான பதவிக்கான போட்டி அல்லது அரசியல் அதிகாரத்திற்க்கான போட்டி என்று நாங்கள் பார்க்கவில்லை. மத சார்பின்மைக்கும், மதவாதத்திற்கும் இடையேயான தேர்தலாக பார்க்கிறோம்.
சமூக நீதியை பாதுகாக்க, ஜனநாயகத்தை பாதுகாக்க, மத சார்பின்மையை பாதுகாக்க திமுக தலைமையிலான இந்த மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி களமிறங்குகிறது. இந்த மண்ணில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்கை வாரிசு முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோர் மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்கிற வகையில் தமிழ்மண்ணை சமூகநீதி மண்ணாக பக்குவப்படுத்தியுள்ளார்கள்.
இதனால் தான் கடந்த அரைநூறு ஆண்டுகளுக்கு மேலாக இங்கே சாதி, மத வெறியர்களுக்கு அரசியல் களத்தில் கால் ஊன்ற முடியாத நெருக்கடி ஏற்பட்டது என தெரிவித்தார். திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சி 6 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…
விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…