“இது மிகவும் கொடூரமானது;மதச்சார்பின்மைக்கு எதிரானது” – மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம்!

Published by
Edison

மதுரை:நவராத்திரி விழாவை முன்னிட்டு போடப்பட்ட உத்தரவு;இனி இதுபோன்ற தவறு நடக்காது என எம்பி சு.வெங்கடேசன் அவர்களுக்கு யூனியன் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

நவராத்திரி விழாவை கொண்டாடும் வகையில், ஒன்பது வண்ண ஆடைகளை அணிந்து வர வேண்டும் என்று யூனியன் வங்கி தனது ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதற்கும்,மேலும்,அவ்வாறு கடைபிடிக்காதவருக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளதற்கும் மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும்,இந்த உத்தரவை திரும்ப பெறவேண்டும் என்று கூறி,யூனியன் வங்கி தலைவருக்கு சு.வெங்கடேசன் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

“ஒன்பது வண்ண ஆடைகளை அணிந்து நவராத்திரி விழாவை கொண்டாடும் வகையில், ஊழியர்களுக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, டிஜிட்டேஷன்,மத்திய அலுவலகத்தின் அதிகாரி ஸ்ரீ ஏ.ஆர்.ராகவேந்திரா சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் பரிந்துரைத்த நாட்களில் விடுமுறை நாட்களும் அடங்கும்.

இது மிகவும் கொடூரமானது மற்றும் அனைத்து விதிமுறைகளையும் மீறி சுற்றறிக்கையை வெளியிட யார் அதிகாரம் அளித்தார்கள்? என்று எனக்குத் தெரியவில்லை. இது அரசு நடத்தும் வங்கியின் இமேஜை மட்டும் சேதப்படுத்தாமல், இந்த மாபெரும் நாட்டின் மனித உரிமைகள் மற்றும் மதச்சார்பற்ற மதிப்புகளை மீறுவதாகும்.

எனது கருத்துக்களுடன் நீங்கள் உடன்படுவீர்கள் என்று நம்புகிறேன் மற்றும் மேலே உள்ள சுற்றறிக்கையைத் திரும்பப் பெறுவதற்கும், தவறு செய்த அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதற்கும் தகுந்த நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,இனி அத்தகைய தவறு நடக்காது என யூனியன் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.மேலும்,இது தொடர்பாக,எம்பி சு.வெங்கடேசன் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் யூனியன் வங்கி பொதுமேலாளர் கூறியிருப்பதாவது:

“வங்கியின் எந்தவொரு ஊழியர்களுக்கும் நிறம் மற்றும் உடையின் அடிப்படையில் நிபந்தனைகளை விதிப்பதும்,அதனை பின்பற்றாததற்கு அபராதம் வசூலிப்பதும் மதச்சார்பற்ற மனப்பான்மைக்கு எதிரானது என்ற உங்கள் உணர்வுகளை நாங்கள் எதிரொலிக்க விரும்புகிறோம்.ஆனால், வங்கி அனுப்பிய அந்தக் கடிதம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இது போன்ற செயல்கள் மீண்டும் நடைபெறாமல் பார்த்துக் கொள்வதாக சம்மந்தப்பட்ட அதிகாரி உறுதியளித்துள்ளதுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற விஷயங்களைக் கையாள்வதில் கவனமாக இருக்கவும் அவருக்குத் தகுந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது”,என்று தெரிவித்துள்ளார்.

 

Recent Posts

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை.! போலீஸிடம் அளித்த வாக்குமூலங்கள் என்ன?

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை.! போலீஸிடம் அளித்த வாக்குமூலங்கள் என்ன?

சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…

41 minutes ago

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…

1 hour ago

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

2 hours ago

வெளுத்து வாங்கும் கனமழை.., வால்பாறை பள்ளிகளுக்கு விடுமுறை.!

கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…

2 hours ago

இன்று மாலை ISS-க்குள் நுழைகிறது ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம்.! அப்போது என்ன நடக்கும்?

அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…

2 hours ago

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட  இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…

12 hours ago