சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கியதற்கு இதுதான் காரணமாம் – சகோதரர் திவாகரன்

Published by
பாலா கலியமூர்த்தி

சசிகலாவின் இடத்திற்கு தான் வரவேண்டும் என நீண்ட நாட்களாகவே டிடிவி தினகரன் திட்டம் தீட்டி வந்தார் என்று திவாகரன் தெரிவித்துள்ளார்.

சசிகலா தீவிர அரசியல் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென நான் அரசியல் இருந்து ஒதுங்குவதாக நேற்று சசிகலா அறிவித்திருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சசிகலாவின் இந்த அறிவிப்பு பலரையும் பலவிதமாக யோசிக்க வைக்கிறது. அரசியலில் ஒதுங்குவதற்கு பலரும் பல காரணங்கள் கூறி வருகிறன்றனர்.

இந்நிலையில் சசிகலா அறிவிப்பிற்கு இது தான் காரணம் என்று அவரது சகோதரர் திவாகரன் கூறுகையில், எங்க குடும்பத்தில் இருக்கிற சிலர் நானே முதல் மந்திரி, நானே ராஜா என்று கூறிக்கொண்டு ஒருத்தர் சுற்று வருகிறார். அவர் பிடியில் தான் சசிகலா இருந்தார்கள். அவர் தன்னுடைய முடிவை சசிகலா மீது திணித்து அரசியலை விட்டு ஒதுங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து உள்ளார்.

தானே செய்யவேண்டும் என்று ஆசைப்படுகிறார், அவரே தன்னை முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவித்துக்கொள்கிறார். அமமுகவுடன் அதிமுக சேர்ந்தால் இணைத்துக் கொள்வோம் என்று கூறுகிறார். இதுபோன்று அடாவடித்தனமாக வேலைகளை செய்து வருகிறார். இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமில்லாதது.

சசிகலாவை வெளியேத்திவிட வேண்டும் என்றும் அந்த இடத்திற்கு தான் வரவேண்டும் எனவும் நீண்ட நாட்களாகவே திட்டம் தீட்டி வந்தார். அதை தற்போது செய்து முடித்துவிட்டார். இதானால் சசிகலா எடுத்த முடிவு நல்ல முடிவு, ஏனென்றால் துரோகிகள் அவர்களை இறக்கிவிட்டு, திரும்ப திரும்ப பலிகடாகத்தான் ஆக்குவார்கள், அதிலிருந்து தப்பித்ததகத்தான் நான் நினைக்கிறன் என கூறியுள்ளார்.

சசிகலாவிற்கும் தற்போது 67 வயது ஆகிவிட்டது, அவரது உடல்யின்மை, அமைதியான வாழ்க்கையை நோக்கி பயணிக்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணம் என தெரிவித்துள்ளார். சசிகலாவின் ஒரே சதோதரர் என்று நான் யோசிக்கும் போது அரசியல் முக்கியமா? உடல்நிலை முக்கியமா என்ற நிலைப்பாட்டில், சசிகலாவின் அறிவிப்பு நல்ல முடிவு என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பல குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த முடிவு, சில பேர் குறுக்கே புகுந்து மாங்கா அடிக்கலாம் என்று நினைத்தவர்களுக்கெல்லாம் இது பெரிய இடியாக இருக்கும். இதுக்கு அப்புறம் அதிமுக தொண்டர்கள், சசிகலாவுக்கே இந்த நிலைமை என்றால் மற்றவர்களுக்கு என்ன ஆகும் என்று யோசித்து பார்த்து நல்ல முடிவு எடுத்து அதிமுகவிற்கு செல்ல வேண்டும். மீண்டும் அம்மாவின் அதிமுக ஆட்சி தமிழகத்தில் அமைவதற்கு தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என சசிகலா கூறியதை நானும் வழிமொழிகிறேன் என தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

1 hour ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

2 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

2 hours ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

3 hours ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

4 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

12 hours ago