இதுதான் அரசின் ‘கடைசி’ பட்ஜெட் கூட்டத்தொடர் என்று ஆளுநர் கூறியதுதான் எனக்கு மிகவும் பிடித்தது ஒன்று என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய முக ஸ்டாலின், ஆளுநர் பேசியதில் எங்களுக்கு பிடித்தது என்னவென்றால், உட்காருங்கள் இந்த அரசாங்கத்தின் இதுதான் கடைசி பட்ஜெட் கூட்டத்தொடர் என்று தெரிவித்தார். இதுதான் உண்மை என்று நான் நினைத்தேன்.
கூட்டத்தை புறக்கணிதத்துக்கு காரணம், கடந்த டிசம்பர் மாதம் ஆளுநரை சந்தித்து அதிமுக அரசின் மீது ஆதாரத்துடன் ஊழல் புகார் அளித்திருந்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆளுநர் ஊழலுக்கு துணை நிற்கும் வகையில் இருந்து கொண்டிருக்கிறார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. எனவே, அதையும் கண்டித்து ஆளுநர் உரையை மட்டுமல்ல, கூட்டத்தொடர் முழுவதும் புறக்கணிப்பு செய்வதென்று முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்திருந்தார்.
புதுச்சேரி : குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் 3 நாள் பயணமாக நேற்றைய தினம் புதுச்சேரி சென்றார். இன்று…
பெங்களூர் : இந்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை நடத்தும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான அட்டவணையை ஐ.சி.சி அறிவித்துள்ளது.…
மதுரை : தமிழ்நாடு பிரீமியர் லீக்தொடரில் சீனியர் வீரரான அஸ்வின் நிதானமிழந்து செய்த காரியங்களுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்த…
ஈரான் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டமிட்டுள்ளது.…
சென்னை : ஆள்கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்திக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்த…
சென்னை : திருவள்ளூரில் காதல் திருமணம் செய்த இளைஞரின் சகோதரரை கடத்தப்பட்ட வழக்கில் தலைமறைவாகி இருந்த புரட்சி பாரதம் கட்சியின்…