கொரோனா வைரஸ் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்ட திரைப்பட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் நிதியை தமிழக அரசு அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் இந்தியாவில் மட்டும் பல கோடிக்கணக்கானோர் வேலை வாய்ப்புகளை இழந்து ஒரு வேளை உணவிற்கு வழியில்லாமல் தவித்து வருகின்றனர். இவர்களில் ஒரு பகுதியினர் திரைப்படங்களில் தொழில் செய்து வந்தவர்களும் தான்.
இந்நிலையில், கொரானா வைரஸ் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பதிவு செய்யப்பட்ட திரைப்பட தொழிலாளர்களுக்கு அரசு தற்பொழுது உதவ முன்வந்துள்ளது. தமிழக அரசால் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் திரைப்பட தொழிலாளர்களுக்கு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…