#Breaking: நகை,பணம் திருடிய உதவி ஆய்வாளர் உட்பட 3 காவலர்கள் கைது..!

Published by
Edison
  • வேலூர் அருகே சாராய வேட்டைக்கு சென்றபோது நகை,பணம் திருடிய உதவி ஆய்வாளர் உட்பட 3 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் அருகே நச்சுமேடு மலைக்கிராமத்தில் உள்ள சிலர் சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதனையடுத்து,அரியூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் அன்பழகன்,காவலர்கள் இளையராஜா மற்றும் யுவராஜ் உள்ளிட்ட 3 பேரும்,சாராய வியாபாரிகளை பிடிக்க சென்றபோது,அவர்களின் வீடு பூட்டியிருந்த நிலையில்,வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 15 பவுன் நகை மற்றும் 8.5 லட்சம் பணம் போன்றவற்றை திருடியுள்ளனர்.

இதனையறிந்த அப்பகுதி கிராம மக்கள் போலீசார் மலையிலிருந்து கீழே இறங்குவதற்குள் அவர்களை மடக்கி பிடித்தனர்.

இதனால்,அவர்கள் 3 பேரும்,தாங்கள் எடுத்த நகை மற்றும் பணத்தை திருப்பிக் கொடுத்தனர்.இருப்பினும்,சம்மந்தப்பட்ட 3 காவலர்கள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கேட்டுக்கொண்டனர்.

இதனையடுத்து,உதவி ஆய்வாளர் அன்பழகன்,காவலர்கள் இளையராஜா மற்றும் யுவராஜ் உள்ளிட்ட 3 பேரையும்,பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவிட்டார்.

இந்நிலையில்,நகை,பணம் திருடிய வழக்கில் அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும்,உதவி ஆய்வாளர் அன்பழகன்,காவலர்கள் இளையராஜா மற்றும் யுவராஜ் உள்ளிட்ட 3 பேர் மீதும்,வசிப்பிடங்களில் புகுந்து திருடுதல் மற்றும் வீட்டிக்குள் அத்துமீறி புகுந்து பொருட்களை எடுத்து செல்லுதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து,தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Recent Posts

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…

10 minutes ago

ஈரானில் தமிழக மீனவர்கள் – மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…

57 minutes ago

INDvsENG : நீங்க நிறுத்திக்கோங்க நான் ஆடுறேன்! போட்டியின் நடுவே விளையாடிய மழை!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…

2 hours ago

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

2 hours ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

3 hours ago

எங்களுக்கு ஜடேஜா தான் தொல்லையா இருப்பாரு! இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேச்சு!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…

3 hours ago