தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, வரும் 26 மற்றும் நவம்பர் 2,9,16,20,23 ஆகிய நாட்களில் காந்திதாமில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலியில் அடுத்த 3 தினங்களில் வந்தடையும். அதனையடுத்து நவ.5, 12, 19, 26 மற்றும் டிச.3 ஆகிய தினங்களில் திருநெல்வேலியில் இருந்து காலை 7.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் அடுத்த 3 தினங்களில் காந்திதாமை காலை 7.45 மணிக்கு வந்தடையும்.
மேலும், வரும் 24-ம் தேதி முதல் ஜபால்பூர் – கோயம்புத்தூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில்களும், வரும் 24-ம் தேதி முதல் ஹவுரா – யஸ்வந்த்பூர் இடையே தினசரி சிறப்பு ரயில்களும்,வரும் 28-ம்தேதி முதல் யஸ்வந்த்பூர் – ஹவுரா இடையே வாராந்திர ஏசி சிறப்பு ரயில்களும் இயக்கப்படவுள்ளன.
இதே போன்று, வரும் 24-ம் தேதி முதல் தர்பாங்கா – மைசூர் இடையே சென்னை சென்ட்ரல் வழியாக வாராந்திர சிறப்பு ரயில்களும்,வரும் 23-ம் தேதி முதல் பாடலிபுத்ரா – யஸ்வந்த்பூர் இடையே சென்னை சென்ட்ரல் வழியாக வாராந்திர சிறப்பு ரயில்களும் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு ரயில்களின் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…