திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள்ளது. இதனால், அம்மாவட்டத்தில் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டுவருகிறது. மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் பகுதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து சீல் வைத்து மக்கள் வெளியில் நடமாட தடைவிதித்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
திருப்பூர் மாநகர காவல்துறையினர் ட்ரான் கேமிரா மூலம் பொதுமக்கள் வெளியில் நடமாடினார்களா என பார்த்து வந்துள்ளனர். அப்போது, பொட்டல் காட்டில் இளைஞர்கள் கேரம் விளையாடி வந்துள்ளனர். அப்போது, ட்ரோன் கேமிராவை பார்த்ததும், இளைஞராகள் பதறி அடித்து ஓடுகின்றனர். அதில் கேரம் போர்டை தூக்கி கொண்டு ஒரு இளைஞர் ஓடுகிறார். அவரை ட்ரோன் மூலம் தொடர்ந்து கண்காணிக்கவே, அவர் அந்த கேரம்போர்டை தூக்கி வீசிவிட்டு ஓடுகிறார்.
இந்த விடியோவை திருப்பூர் போலீசார் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் மக்களுக்கு வெளியில் தேவையில்லாமல் சுற்றக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த விடியோவை வெளியிட்டதாக குறிப்பிட்டனர்.
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…