lover Dead [FILE IMAGE]
திருப்பூரில் காதலியின் கழுத்தை அறுத்துக் கொன்று காதலன் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வரவேற்பாளராக பணிபுரிந்து வந்த 21 வயதான சத்யஸ்ரீ என்ற பெண்ணும், காட்டுமன்னார்குடியை சேர்ந்த 25 வயதான நரேந்திரன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன்பிறகு, இன்று காலை சத்யஸ்ரீயை பார்க்க மருத்துவமனைக்கு சென்ற நரேந்திரன், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த நரேந்திரன், மறைத்து வைத்திருந்த கத்தியால் சத்யஸ்ரீயின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
பிறகு நரேந்திரனும் தனது கழுத்தை அறுத்துக்கொண்டுள்ளார். பின் மருத்துவமனை ஊழியர்கள் இருவரையும் சிகிச்சைக்காக அழைத்துசென்றுள்ளனர். ஆனால், சத்யஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நரேந்திரன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…