நவீன முறையில் அவரவர் வீட்டு வாசலிலேயே மின் கட்டணம் வசூலிக்கும் புதிய வசதியை, தமிழக மின் வாரியம் விரைவில் அறிமுகப்படுத்துகிறது.
தமிழகத்தில் உள்ள வீடுகளில், இரு மாதங்களுக்கு ஒரு முறை, மின் வாரிய ஊழியர்கள் மின் உபயோகத்திற்காக கணக்கு எடுக்கின்றனர். நம் பயன்படுத்திய மின் கட்டணத்தை, மின் கட்டண மையங்கள், அரசு, ‘இ – சேவை’ மையங்கள், இணையம் வழி, தபால் நிலையங்களில் செலுத்தலாம். சட்டசபையில், ‘பாயின்ட் ஆப் சேல்’ கருவி வாயிலாக, கிரெடிட், டெபிட் கார்டுகளில், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினால், வீட்டு வாசலிலேயே வசூல் என்ற, கூடுதல் வசதி அறிமுகப்படுத்தப்படும். ‘இந்த வசதி, முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், தங்கள் கட்டணத்தை இலகுவாக செலுத்த ஏதுவாக இருக்கும்’ என, மின்துறை அமைச்சர் தங்கமணி அவர்கள் , கடந்த மார்ச் மாதம் அறிவித்தார். இதற்காக,மின்வாரிய ஊழியர்களிடம், பாயின்ட் ஆப் சேல் கருவி வழங்கப்படும். அவர்கள், மின் பயன்பாடு கணக்கெடுத்து, கட்டணத்தை நுகர்வோரிடம் தெரிவிக்கும் போது, பணம் செலுத்த விரும்புவோர், உடனே டிஜிட்டல் முறையில் செலுத்தலாம்.’கியு ஆர் கோடு’ என்ற ரகசிய குறியீட்டை, மொபைல் போனில், ‘ஸ்கேன்’ செய்து, மின் கட்டணம் செலுத்தும் வசதியும் விரைவில் அறிமுகமாக உள்ளது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…