இன்று டெல்லியில், நாளை தமிழகத்தில்.! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து கூறிய மக்கள் நீதி மய்யம் தலைவர்.!

Published by
பாலா கலியமூர்த்தி

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் தேர்தல் முடிவுகளை வெளியிட்டு வருகிறது தேர்தல் ஆணையம். இந்த தேர்தலில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. அதற்கான வாக்கு எண்ணிக்கை 22 மையங்களில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது நிலவரப்படி 70 தொகுதிகளில் 50 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி அதிகாரபூர்வமாக வெற்றி பெற்றுள்ளது. பாஜக 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என அறிவிக்கப்பட்டது. மொத்தம் 70 தொகுதிகளில் 56 தொகுதிகளுக்கு அதிகாரபூர்வமாக  அறிவிப்பை தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி 3-வது முறையாக பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைக்க உள்ளது. இதனை டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதில் 3-வது முறையாக முதலமைச்சராகும் அரவிந்த் கெஜ்ரிவால் தொண்டர்கள் இடையே உரையாற்றி டெல்லி மக்களுக்கு நன்றி என தெரிவித்தார். இந்த நிலையில் டெல்லி முதல்வருக்கு பல கட்சி தலைவர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் அவரது ட்விட்டர் பக்கத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து கூறி பதிவிட்டுள்ளார். அதில் மீண்டும் டெல்லியில் வென்றதுக்கு வாழ்த்துக்கள் எனவும், அடுத்த ஆண்டு இதை தமிழ்நாட்டு மக்கள் பின்பற்றுவார்கள் என்று தெரிவித்தார். மேலும் நேர்மை மற்றும் வளர்ச்சியை நோக்கி செல்லலாம் என குறிப்பிட்டுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…

5 hours ago

போர் எப்போது.? ”நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது” – டிரம்ப் சூசக பதில்.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…

5 hours ago

தமிழகம் முழுவதும் ஜூலை 9ம் தேதி டாஸ்மாக் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் பணியாளர் சங்கம்.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…

6 hours ago

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…

7 hours ago

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…

8 hours ago

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…

8 hours ago