அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதியின் முழு உருவ சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதியின் முழு உருவ சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அவருடன் முதன்மை செயலாளர் ஆர்.டி.பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் மட்டும் பங்கேற்கிறார்கள்.
இதேபோல் அண்ணா நினைவிட வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்துக்கும் சென்று மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து வணங்குகிறார். இதனிடையே, கொரோனா அச்சுறுத்தலால் இன்று கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை ஆடம்பரமின்றி திமுகவினர் கொண்டாட வேண்டும் என்றும் கொரோனா பரவலால் சென்னையில் கருணாநிதி பிறந்த நாளுக்கு ஆடம்பர நிகழ்வுகளை நடத்த வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் நான் அஞ்சலி செலுத்த போகும் போது யாரும் கூட்டம் கூடாமல் அவரவர் இருந்த இடத்திலேயே பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும். குறிப்பாக இருக்கும் இடத்திலேயே சமூக இடைவெளியை கடைப்பிடித்து பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்று முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…
சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…