செந்தில் பாலாஜி வழக்கில் இன்று முக்கிய முடிவு! – தீர்ப்பு வழங்கப்படுமா? என எதிர்பார்ப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

செந்தில் பாலாஜி வழக்கில் இரு தரப்பும் மீண்டும் இன்று வாதங்களை வைக்கவுள்ள நிலையில், முக்கிய முடிவு எடுக்கவுள்ளார் 3வது நீதிபதி.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைதை எதிர்த்து அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற 3வது நீதிபதி சிவி கார்த்திகேயன் முன்பு 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் நடைபெற்றது. முதல் நாள் செந்தில் பாலாஜி தரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில், 2வது நாள் அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார். அப்போது, தங்களிடம் உள்ள ஆதாரங்களை அமலாக்கத்துறை பட்டியலிட்டு வாதாடிய சொலிசிட்டர் துஷார் மேத்தா, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்படி புலன் விசாரணை செய்வது அமலாக்கத்துறையின் கடமை.

காவலில் எடுத்து விசாரிக்க சட்டத்தில் அனுமதி வழங்காவிட்டாலும், புலன் விசாரணை செய்வது கடமை. குற்றத்தை கண்டுபிடிக்க, சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்ட பணத்தை முடக்கம் செய்வது, சோதனை செய்வது, வழக்கு தாக்கல் செய்ய அதிகாரம் உள்ளது என பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டது.  இதுபோன்று, குற்றம் மூலம் பெற்ற பணத்தை வைத்ததாகவோ, மறைத்ததாகவோ எந்த ஆதாரமும் இல்லை, குற்றம் செய்ததற்கான அனைத்து ஆதாரங்களும் இருந்தால் மட்டுமே கைது செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அமலாக்கத்துறை விசாரணை நடத்த மட்டுமே அதிகாரம் உண்டு. தவிர புலன் விசாரணை மேற்கொள்ள அதிகாரம் இல்லை எனவும் செந்தில் பாலாஜி தரப்பு வாதத்தில் வாதம் வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமைக்கு (இன்று) ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், செந்தில் பாலாஜியின் ஆட்கொண்ர்வு மனு மீது ஜூலை 14ம் தேதி (இன்று) விசாரணை முடிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி  கார்த்திகேயன் முன்பு இன்று 3வது நாளாக வாதங்கள் வைக்கப்பட உள்ளன. செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக அவர் தரப்பு குற்றச்சாட்டுக்கு  மறுப்பு தெரிவித்து, அமலாக்கத்துறையின் புலன் விசாரணையை முடக்க யாருக்கும் உரிமை இல்லை என பதிலடி கொடுத்தது. எனவே இரு தரப்பும் மீண்டும் இன்று வாதங்களை வைக்கவுள்ளன. இதன் அடிப்படையில் 3வது நீதிபதி முக்கிய முடிவு எடுக்கவுள்ளார். இதனால் செந்தில் பாலாஜியின் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வெளுத்து வாங்கிய கனமழை! 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

சென்னை : மே 16 முதல் 19, 2025 வரை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி…

7 minutes ago

போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்த பங்கு இல்லை – விக்ரம் மிஸ்ரி விளக்கம்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…

53 minutes ago

12 மாவட்டத்துக்கு கனமழை…அந்த 1 மாவட்டத்திற்கு மிக கனமழை…வானிலை மையம் அலர்ட்!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. …

1 hour ago

ரிஷப் பண்ட் உங்க பாணியை மாத்தாதீங்க…ஜடேஜா முக்கிய அட்வைஸ்!

லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை…

2 hours ago

கொரோனா கட்டுக்குள் இருக்கு…மக்கள் பயப்படவேண்டாம்! மத்திய அரசு விளக்கம்!

டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…

2 hours ago

LSG vs SRH : அதிரடி காட்டிய ஹைதராபாத்..,! பிளே ஆப்-பில் இருந்து வெளியேறிய லக்னோ.!

லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…

9 hours ago