சுற்றுலாத்தலங்கள் வார இறுதியில் மட்டும் களை காட்டுகிறது, மற்ற நாட்களில் வெறிச்சோடி உள்ளது என நீலகிரி சுற்றுலா சார்பில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் மக்களுக்காக அரசு சில தளர்வுகளை அறிவித்து வரும் நிலையில், சிறு குறு வியாபாரிகள் சுற்றுலாத் தலங்களை நம்பி இருக்கக்கூடிய வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக கடந்த மாதம் ஒன்பதாம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தளங்களை திறக்க உத்தரவு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து கூறக்கூடிய சுற்றுலாத்தள அமைச்சகம் குறைந்த அளவிலான இ பாஸ் வழங்கப்பட்டு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
மேலும் நீலகிரியில் தொட்டபெட்டா முதுமலை ஆகிய சுற்றுலாத் தலங்கள் திறக்கப்படாததால் பயணிகளின் வருகை குறைவாக உள்ளதாகவும், வார இறுதி நாட்களான சனி ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாகவும் மற்ற நாட்களெல்லாம் பயணிகள் வருகை குறைந்து வெறிச்சோடி காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் வார இறுதி நாட்களில் தான் தாவரவியல் பூங்கா ரோஜா பூங்கா உள்ளிட்ட 6 பூங்காக்களையும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசிப்பதாகவும், மற்ற நாட்களில் 150 பேர் கூட நாளொன்றுக்கு வருவதில்லை எனவும் கூறியுள்ளனர்.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…