தாம்பரம் அருகே சோகம் ! சுவர் இடிந்து  விழுந்து தந்தை மற்றும் 2 மகள்கள் உயிரிழப்பு

Published by
Venu

வீட்டின் வாசலில் அமர்ந்திருந்தபோது சுவர் இடிந்து  விழுந்து தந்தை மற்றும் 2 மகள்கள் உயிரிழந்துள்ளனர்.

ராஜாங்கம் என்பவர் சென்னை தாம்பரம் அடுத்த பீர்க்கன்கரணை பகுதியில் வசித்து வந்தார் .இவர்பெயிண்டர் வேலை பார்த்து வந்தார்.கொரோனா காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ராஜாங்கம் அவரது வீட்டில் 2 மகள்களுடன் தங்கி இருந்துள்ளார்.இதற்கு இடையில் நேற்று இரவு வீட்டின் முன்பு ராஜாங்கம் மகள்கள் இருவருடன் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்.

அவர்கள் அமர்ந்திருந்த இடத்தை சுற்றி சுவர் இருந்த நிலையில் அது திடீரென இடிந்து விழுந்தது.இதனால் ராஜாங்கம் மற்றும் அவரது இரண்டு மகள்கள் பலத்த காயமடைந்தனர்.அருகில் இருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.இதில் ராஜாங்கம் கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்தார்.மகள்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்களும் உயிரிழந்தனர்.இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published by
Venu

Recent Posts

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

44 seconds ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

7 minutes ago

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை.! போலீஸிடம் அளித்த வாக்குமூலங்கள் என்ன?

சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…

59 minutes ago

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…

1 hour ago

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

2 hours ago

வெளுத்து வாங்கும் கனமழை.., வால்பாறை பள்ளிகளுக்கு விடுமுறை.!

கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…

2 hours ago