வீட்டின் வாசலில் அமர்ந்திருந்தபோது சுவர் இடிந்து விழுந்து தந்தை மற்றும் 2 மகள்கள் உயிரிழந்துள்ளனர்.
ராஜாங்கம் என்பவர் சென்னை தாம்பரம் அடுத்த பீர்க்கன்கரணை பகுதியில் வசித்து வந்தார் .இவர்பெயிண்டர் வேலை பார்த்து வந்தார்.கொரோனா காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ராஜாங்கம் அவரது வீட்டில் 2 மகள்களுடன் தங்கி இருந்துள்ளார்.இதற்கு இடையில் நேற்று இரவு வீட்டின் முன்பு ராஜாங்கம் மகள்கள் இருவருடன் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்.
அவர்கள் அமர்ந்திருந்த இடத்தை சுற்றி சுவர் இருந்த நிலையில் அது திடீரென இடிந்து விழுந்தது.இதனால் ராஜாங்கம் மற்றும் அவரது இரண்டு மகள்கள் பலத்த காயமடைந்தனர்.அருகில் இருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.இதில் ராஜாங்கம் கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்தார்.மகள்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்களும் உயிரிழந்தனர்.இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…
சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…
கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…