தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட முதன்முறையாக வேட்புமனு தாக்கல் செய்த திருநங்கை.!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட முதன்முறையாக வேட்புமனு தாக்கல் செய்த திருநங்கை பாரதி கண்ணம்மா.

தமிழகத்தில் வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட முதன்முறையாக திருநங்கை பாரதி கண்ணம்மா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவர் மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2011ம் ஆண்டுக்கு பிறகு தேர்தலில் திருநங்கைகளும், மாற்றுப்பாலினச் சிறுபான்மையினரும் போட்டியிடலாம் என்ற நிலை உருவானது. இதையடுத்து மக்களவைத் தேர்தலில் சென்னையில் ஒரு திருநங்கை போட்டியிட்டார்.

இதனிடையே, மதுரையைச் சேர்ந்த திருநங்கை பாரதி கண்ணம்மா என்பவர் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, திருநங்கைகளின் உரிமைகளுக்காகப் போராடி, இந்த நிலைமையை உருவாக்கி நீதியைப் பெற்றுத்தந்தவர்.

கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட பாரதி கண்ணம்மா, இந்தியாவிலேயே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முதல் திருநங்கை வேட்பாளர் என்ற பெருமைக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கோவை தெற்கில், பாஜக வானதி சீனிவாசன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் மயூரா ஜெயக்குமார் ஆகிய வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக பாரதி கண்ணம்மா போட்டியிடுகிறார்.

 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

5 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

7 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

11 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

12 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

14 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

14 hours ago