தமிழகத்தில் மேலும் இருவர் உயிரிழப்பு..பாதிப்பு 1,500-ஐ தாண்டியது.!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழகத்தில் 1,477 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 43 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,520 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனாவுக்கு மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே யரிழப்பின் எண்ணிக்கை 15 ஆக இருந்த நிலையில், தற்போது 17 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் 46 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 457 ஆக உள்ளது.

இதையடுத்து இன்றும் மட்டும் 6,109 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 47,710 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா சிகிச்சையில் 1043 பேர் தற்போது உள்ளனர் என்றும் தமிழகத்தில் உயிரிழப்பின் விகிதம் 1.1% ஆகவும், குணமடைந்தவர்களின் விகிதம் 30% ஆகவும் இருக்கின்றது. இன்று சென்னையில் மட்டும் 18 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 303 ஆக உயர்ந்துள்ளது. மேலும் முதல் முறையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது என்பது குறிப்பிடப்படுகிறது.

மேலும் தமிழகத்தில் கொரோனா தொற்று இன்னும் சமூக பரவலாக மாறவில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். குறிப்பாக கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி தவிர தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரவியுள்ளது. இதையடுத்து மலிவான அரசியலை திமுக தலைவர் ஸ்டாலின் கைவிட வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனமே பாராட்டும் வகையில் தமிழக அரசு செயல்படுகிறது என கூறினார். இது அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல என்று எதிர்க்கட்சித் தலைவர் புரிந்துகொள்ள வேண்டும். மேலும் கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதை தடுத்து நிறுத்தாதீர்கள், தடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், 20 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

11 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

12 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

13 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

13 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

13 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

14 hours ago