ஆன்லைன் வகுப்பு கற்க செல்போன் வாங்க பணமில்லாததால் சாக்கடை அள்ளிய மாணவிக்கு லேப்டாப் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்!

Published by
Rebekal
ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள செல்போன் வாங்க பணம் இல்லாததால் சாக்கடை அள்ளி பணம் சம்பாதித்த மாணவனுக்கு உதவிய உதயநிதி ஸ்டாலின்.
தமிழகம் முழுவதிலும் கொரானா வைரஸின் தீவிரம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும் தற்போது மாணவர்களின் படிப்பு கெட்டு விடக்கூடாது என்பதற்காக அரசாங்கம் ஆன்லைன் மூலமாக பாடங்களை நடத்தலாம் என அனுமதி அளித்துள்ளது. அதன்படி அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிளிலும் ஆன்லைன் மூலமாக தற்பொழுது பாடங்கள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனால், நடுத்தர குடும்பத்தினராக இருந்தாலும் அவர்களிடம் ஸ்மார்ட்போன் இல்லாவிட்டாலும் பாடம் கற்க வேண்டும். எனவே, தற்பொழுது ஸ்மார்ட்போன் அவசியம் என்ற ஒரு நிலை வந்துள்ளது.
இந்நிலையில் சென்னை அருகே உள்ள கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர் ஒருவர் செல்போன் இல்லாததால் அதற்கான பணத்தை சம்பாதிக்க கோயம்பேடு அருகே உள்ள வடிகால் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான செய்திகளும் புகைப்படங்களும் சமூகவலைதளத்தில் பரவி சோகத்தை ஏற்படுத்தியது. இதை அறிந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், இளைஞரணி சார்பில் சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சேகர் பாபு அவர்களது ஏற்பாட்டில் நடைபெற்ற கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கான விழாவில் அந்த மாணவருக்கு லேப்டாப் பையும் அதற்கான டேட்டாவையும் வழங்கியுள்ளார். இதனால் உதயநிதி ஸ்டாலினுக்கு சமூக வலைதளங்களில் தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Published by
Rebekal

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

7 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

7 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

8 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

8 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

10 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

10 hours ago