வேலையில்லாததால் நத்தை வேட்டையில் களமிறங்கி கலக்கும் கூலி தொழிலாளர்கள்!

Published by
Rebekal

வேலையில்லாததால் நத்தை வேட்டையில் களமிறங்கி கலக்கும் கூலி தொழிலாளர்கள், அமோகமாக விற்பனை நடைபெறுவதாக மகிழ்ச்சி.

அண்மை காலங்களாகவே கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்திருப்பதால் கூலித் தொழிலாளர்கள் பலர் வேலையிழந்து காணப்படுகின்றனர். அதிலும் தஞ்சை மாவட்டத்திலுள்ள பேராவூரணியில் காவிரி கிளை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டாததால் விவசாயிகள் விவசாயப் பணிகளை நடத்த முடியாமல் உள்ளனர். இந்நிலையில் கூலி தொழிலாளர்கள் பல்வேறு வேலைகளை தேடி சென்றுள்ளனர். அதில் ஒன்றாக ஆற்றங்கரை குளக்கரை, வயல்வெளிகள் உலாவக்கூடிய நத்தைகளை பிடித்து அவற்றை விற்று வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இரவு முதல் அதிகாலை வரையிலும் நத்தை பிடித்து வருகின்றனர். அதன்பின் கடைவீதி ஒயின்ஷாப் வாசலில் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

கூறு கூறாக அவற்றைப் போட்டு 50 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர். சுவையுடன் விலையும் குறைவாக இருப்பதால் அசைவ பிரியர்கள் இதை மிகவும் விரும்பி வாங்கிச் செல்வதாக கூறியுள்ளனர். இதுகுறித்து கூறிய நத்தை வியாபாரி ஒருவர், விவசாய பணிகள் அதிகம் இல்லாததால் நத்தைகளை சேகரித்து விற்பனை செய்து வருகிறோம். நத்தை கறி சுவையாக இருக்கும், அதுவும் நாங்கள் விலை மலிவாக கொடுப்பதால் அதிக அளவில் வாங்குகின்றனர். எனவே இவைகளை சேகரித்து வைக்க திட்டமிட்டுள்ளோம். கடந்த சில நாட்களாக எங்களுக்கு இதன் மூலமாக தான் பிழைப்பு ஓடுகிறது என கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

24 minutes ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

55 minutes ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

3 hours ago

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

4 hours ago

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

4 hours ago