DIG Ramya Bharathi - DIG Ponni [File Image]
சென்னை : தமிழகத்தை சேர்ந்த 2 பெண் டிஐஜிகளுக்கு மத்திய அரசு பணிகள் ஒதுக்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஐபிஎஸ், ஐஏஎஸ் எனும் இந்திய காவல் பணிகள், இந்திய குடிமை பணிகள் ஆகிய முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் மத்திய மற்றும் மாநில அரசு என இரு வித பணிகளிலும் அரசின் தேவை மற்றும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பணியமர்த்தப்படுவார்கள்.
அதன்படி, தமிழகத்தில் இருந்து மத்திய அரசு பணிகளுக்கு செல்ல ஆர்வமுள்ள நபர்களின் பட்டியலில் உள்ளவர்களில் மதுரை சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வரும் ரம்யா பாரதி மற்றும் காஞ்சீபுரம் சரக காவல்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த பொன்னி ஆகியோரை மத்திய அரசு பணிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பணியமர்த்தி உள்ளது.
மத்திய அரசின் உத்தரவுக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. டிஐஜி ரம்யா பாரதி மத்திய விமான பாதுகாப்பு பிரிவிற்கும் , டிஐஜி பொன்னி மத்திய தொழிற் பாதுகாப்பு படைக்கும் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதே போல மாநில அரசின் ஆட்சி பணிகளுக்கும், மத்திய அரசு அதிகாரிகள் தேவை இருப்பின் அதற்கான இடமாற்ற உத்தரவுகளும் அவ்வப்போது மத்திய அரசின் ஒப்புதலோடு நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…