தடுப்பூசி போடாத மாணவர்களுக்கு கல்லூரியிலே தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யபட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.
கல்லூரிக்கு வரும் மாணவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளார்களா? என சோதிக்க வேண்டும் என்றும் தடுப்பூசி போடாத மாணவர்களுக்கு கல்லுரிலேயே தடுப்புசி முகாம்கள் ஏற்பாடு செய்யபட்டுள்ளது எனவும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை லயோலா கல்லூரியில் தடுப்பூசி சிறப்பு முகாமை தொடங்கிவைத்து செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அவர், அரசின் சார்பில் 3.5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 21.28 லட்சம் பேருக்கு தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அட்மிஷன் முடித்து கல்லூரிக்கு வரும்போது அனைத்து மாணவர்களும் தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும். அதற்கான சான்றிதழை சமர்பித்துவிட்டு வகுப்பறைக்கு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கல்லுரியில் வகுப்புக்கு வருகின்ற மாணவர்கள் யாரேனும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருந்தால் அவர்களுக்கு கல்லூரிகளிலேயே தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…