திமுக அமைச்சர்கள் களத்தில் இறங்கி வேலை செய்கின்றனர்! வடிவேலு பாராட்டு.!

Published by
பால முருகன்

தமிழகத்தின் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பலருடைய இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டு சாப்பிடுவதற்கு சாப்பாடு கூட இல்லாமல் மிகவும் கஷ்ட்டப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான உணவுகளை திமுகவை சேர்ந்தவர்கள் மற்றும் மற்ற காட்சிகளில் இருப்பவர்களும் வழங்கி கொண்டு வருகிறார்கள்.

குறிப்பாக திமுக எம்பி கனிமொழி நேரடியாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க மீட்பு துறையினருடன் ஈடுபட்டு மக்களை மீட்டார். அது மட்டுமின்றி தன்னுடைய சொந்த நிதியிலிருந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்த 3 நாட்களிலும் சாப்பாடுகளை செய்து வழங்கினார். அவரை போலவே திமுகவை சேர்ந்த பலரும் மக்களுக்கு உதவிகளை செய்தனர்.

இந்த நிலையில், மிக்ஜாம் புயலில் காணாமல் போன மரங்களுக்கு ஈடாக 5,000 மரங்கள் கொடுக்கும் விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் நடிகர் வடிவேலு கலந்துகொண்டு திமுக அமைச்சர்களை பாராட்டினார். நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த வடிவேலு ” வெள்ளத்தில் இருந்து மக்களை மீட்டு அவர்களுக்கு செய்து வரும் நிவாரண பணிகளை திமுக அரசு நன்றாக செய்து வருகிறது.

மக்கள் படும் வேதனைகள் மற்றும் அவர்களுடைய உணர்வுகள் எல்லாம் முதலமைச்சருக்கு புரிந்துள்ளது. அதனால் தான் எல்லா அமைச்சர்களும் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய இடங்களுக்கு நேரடியாக சென்று வேலை செய்து வருகிறார்கள். இந்த வெள்ளத்தில் உயிர்சேதம் இல்லாத வகையில், வேலை செய்து வருகிறார்கள். மழை எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வரலாம் எனவே அதற்கு நாம் கவனமாகவும் விழிப்புணர்வாகவும் இருக்கவேண்டும்” எனவும் நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

1 hour ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

2 hours ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

3 hours ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

18 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

19 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

19 hours ago