இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் இவர்தான் பிரதமர்..! வைகோ அறிவிப்பு.!

Published by
மணிகண்டன்

I.N.D.I.A Alliance : இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் ராகுல் காந்தி தான் பிரதமர் என வைகோ அறிவித்துள்ளார்.

ஆளும் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) அமைக்கப்பட்டு தமிழகத்தில் பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் உட்பட தேசிய அளவிலில் பல்வேறு கட்சிகளை ஒன்றிணைத்து மக்களவை தேர்தலை எதிர்கொள்கிறது. NDA கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதே போல, காங்கிரஸ்,, திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட் கட்சிகள் , விசிக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணி (I.N.D.I.A) என்ற பெயரில் மக்களவை தேர்தலை எதிர்கொள்கின்றன. ஆனால் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என இன்னும் அறிவிக்கவில்லை. ராகுல் காந்தி இந்தியா கூட்டணியின் பொதுவான முகமாக காண்பிக்கப்பட்டாலும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இப்படியான சூழலில், மதிமுக தலைவர் இன்று இந்தியா கூட்டணி பாஜக வேட்ப்பாளர் ராகுல் காந்தி என் அறிவித்துள்ளார். இன்று மதிமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சி தலைவர் வைகோ வெளியிட்டார். அதில், 74 தலைப்புகளின் கீழ் பல்வேறு வாக்குறுதிகள் அதில் குறிப்பிடபட்டு உள்ளது.

அப்போது பேசிய, வைகோ, இந்தியா கூட்டணி வெற்றிபெற்றால் ராகுல் காந்தி தான் பிரதமர் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதை மதிமுக வழிமொழிகிறது என தெரிவித்தார். இந்தியா கூட்டணியில் திருச்சி தொகுதியில் திமுக தலைமையில் மதிமுக போட்டியிடுகிறது.

Recent Posts

ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாஙகிய சூர்ய குமார்.! டெல்லி அணிக்கு இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

30 minutes ago

175 பில்லியன் டாலரில் அமெரிக்காவை பாதுகாக்க `கோல்டன் டோம்’.., டிரம்ப் அறிவித்த திட்டம் என்ன?

வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்' அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்…

1 hour ago

ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்.? ஊர்ந்தீர்களா? தவழ்ந்தீர்களா? ஸ்டாலின் மீது இபிஎஸ் விமர்சனம்.!

சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி…

1 hour ago

MI vs DC: பிளே ஆஃப்-க்கு தகுதி பெறப்போவது யார்? டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு.!

மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும்  டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…

3 hours ago

அனகாபுத்தூர் ஆற்றங்கரையோர மக்களுக்கு மாற்று வீடு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!

சென்னை : உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் சென்னையை அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், அடையாறு நதியை…

3 hours ago

விசாகா கமிட்டி அமைக்காதது ஏன்? – அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி.!

சென்னை : பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் 'விசாகா கமிட்டி’ அமைக்காதது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி…

4 hours ago