வைகோதான் NO:1 துரோகி !கே.எஸ்.அழகிரியை தொடர்ந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சனம்

Published by
Venu

துரோகி நம்பர் ஒன் என்ற நிலையில் வைகோ உள்ளார் என்று முன்னாள்  தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவிதித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா தொடர்பான விவாதம் மாநிலங்கவையில் நடைபெற்றது.அப்பொழுது மதிமுக எம்.பி.வைகோ பேசுகையில்,காங்கிரஸ் துரோகம் செய்து விட்டது  என்று பேசினார்.

வைகோவின் இந்த பேச்சிற்கு  தமிழ்நாடு காங்கிரஸ்  கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில்,அரசியலில் சந்தர்ப்பவாதம் கொண்ட ஒரு பச்சோந்தி வைகோ. காங்கிரஸின் கூட்டணியில் இருந்துகொண்டு காங்கிரஸையே விமர்சிக்கும் வைகோ அரசியல் நாகரீகமற்றவர்  என்றும் கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் முன்னாள்  தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆதரவால்தான்  மாநிலங்களவையில் எம்.பி ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார் வைகோ.எம்.பி.யாகி இன்னும் பதினைந்து நாட்கள் கூட ஆகவில்லை.பதினைந்து நாட்களுக்குள் நன்றி மறந்த ஒருவர் என்று சொன்னால் அது வைகோதான்.

அனாதையாக இருந்தவரை இன்றைக்கு திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில்  சேர்த்ததன் விளைவாகத்தான் ,அவர் கணேச மூர்த்தி என்ற எம்.பி.யை பெற முடிந்தது.காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை வைத்துதான் மாநிலங்களவையில் வைகோ பேசியுள்ளார். அமித் ஷா சொல்லித்தான் வைகோ பேசியிருக்கிறார்.இவர் ஒரு மிகப்பெரிய துரோகி.நன்றி  மறந்தவர் என்றுதான் சொல்ல வேண்டும். கள்ளத்தோணி நாயகன்  என்ற பெயர் இப்போது துரோகி நம்பர் ஒன் என்ற நிலையில் வைகோ உள்ளார்.அவரை பற்றி பேசினால் கண்டிப்பாக அது மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கும்.ஆகவே  காங்கிரஸ் பற்றி பேசுவதை வைகோ தவறாக விமர்சனம் நிறுத்திக்கொள்ள வேண்டும்.நன்றியோடு இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரம் ஒரு புறம் சென்றுகொண்டிருக்க,தற்போது காஷ்மீர் விவாதத்தில்  வைகோ பேசியது பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

2 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

3 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

3 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

4 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

5 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

5 hours ago