சென்னை:தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இன்று முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர்கள் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வந்தது.எனினும்,கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அந்த வகையில்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஆண்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதற்கிடையில்,வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பணிபுரியும் 70 ஊழியர்களுக்கு முன்னதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில்,கடந்த ஜனவரி 17 ஆம் தேதி முதல் பூங்கா மூடப்பட்டது.இதனையடுத்து,தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதையொட்டி,இரவு நேர ஊரங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் போடப்பட்ட முழு ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு நீக்கியது.
இந்நிலையில்,வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இன்று முதல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர்கள் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததால் வண்டலூர் உயிரியல் பூங்கா மீண்டும் திறக்கப்படுவதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும்,பார்வையாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் பூங்கா நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…