கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சமுக இடைவெளியை கடைபிடிக்க அரசு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், வாணியம்பாடி நகராட்சியில் நேற்று செவ்வாய்க்கிழமை சமூக இடைவெளி இன்றி பழங்களை விற்பனை செய்த மூன்று கடைகளில் வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் திரு. சிசில் தாமஸ் அவர்கள் பழங்களை கீழே தள்ளி கடைகளை காலிசெய்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்த வாணியம்பாடி நகராட்சி ஆணையரின் இந்த மனிதத்தன்மையற்ற செயலுக்கு அனைத்து தரப்பு மக்களிடமிருந்தும் பல்வேறு கட்சிகளிடம் இருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு அந்த நிகழ்வு நடந்த இடத்திற்கு நேரில் சென்ற நகராட்சி ஆணையர், பழ கடை உரிமையாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி தனது செயலுக்கு வருத்தமும் தெரிவித்தார். மேலும் விற்பனை செய்யும் போது சமூக இடைவெளி விட்டு மீண்டும் விற்பனை செய்யவேண்டும் எனவும் அவர்களுக்கு அறிவுறுத்தினார். இதற்கு மத்தியில், இவரின் அந்த மனித தன்மையற்ற செயலை மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ததோடு நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் விடுத்தது. இந்த நிலையில், தற்போது வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். நகராட்சி நிர்வாக ஆணையர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம்…
விழுப்புரம்: பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான…
டெல்லி : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக ஜூன் 26, 2025 முதல் புதிய…
டெல்லி : மத்திய விவசாயிகள் பாசனத்திற்காக பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் நீர்…