பக்தர்கள் இன்றி நடைபெற்ற வேளாங்கண்ணி பேராலய தேர்பவனி!

Published by
Rebekal

நாகையில் பக்தர்கள் இன்றி நடைபெற்ற வேளாங்கண்ணி பேராலய தேர்பவனி.

நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி பேராலயத்தில், வருடம் தோறும் 10 நாட்கள் திருவிழா அட்டகாசமாக நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக இந்த வருடம் பக்தர்கள் இன்றி மிகவும் சாதாரணமான நிலையில் திருவிழா நடத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி பக்தர்கள் இன்றி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்ட இந்த திருவிழாவில், பக்தர்கள் வருவதை தடுப்பதற்காக 8 வழிகளும் ஆலயத்தை சுற்றி அடைக்கப்பட்ட நிலையிலேயே கடந்த ஒன்பது நாட்களும் இருந்துள்ளது. இந்நிலையில் உள்ளூர் பக்தர்களுக்கு காலை 8 மணி முதல் 5.30 மணி வரை வழிபாடு நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது.

இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இறுதி நிகழ்ச்சி தேர்பவனி நேற்று நடைபெற்றுள்ளது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பேராலயம் முன்பு, புனித மிக்கேல், சூசையப்பர், அன்னை மாதா ஆகியோரின் பெரிய தேர்கள் பவனியாக சென்றுள்ளது. ஆலயத்தை சுற்றி தேர்பவனி நடந்தாலும் பேராலய அதிபர் பங்குத்தந்தை, திருச்சி மண்டல ஐஜி, நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்ட படி இந்த தேர் பவனி நடைபெற்றது. எப்பொழுதும் கோலாகலமாக இந்தியாவில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் உள்ளவர்களும் வந்து கலந்து கொள்ளக் கூடிய அளவு பிரமாண்டமாக நடக்க கூடிய இந்த திருவிழா இந்த வருடம் மக்கள் இன்றி கொடி ஏற்றப்பட்டு, தேர் பவனியும் நடைபெற்றுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி.., கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்..!

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி.., கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்..!

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் இன்று (ஜூலை 30 ) 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இது இதுவரை பதிவு…

3 minutes ago

”மெல்லக்கூடிய புகையிலை பயன்படுத்தினால் அபராதம்” – மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிரடி.!

சென்னை : மெட்ரோ இரயில்கள் மற்றும் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. இதை மீறினால் அபராதம் விதிக்கப்படும்…

1 hour ago

கவின் ஆணவக் கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் – டிஜிபி அறிவிப்பு.!

சென்னை : நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி (CBCID) விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக…

1 hour ago

தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் கனமழை வெளுத்து வாங்கும்.! எங்கெல்லாம் தெரியுமா.?

சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…

2 hours ago

“1998ல் பாஜக ஆட்சியைக் கவிழ்த்து வரலாற்றுப் பிழையை செய்துவிட்டார் ஜெயலலிதா” – கடம்பூர் ராஜு கடும் விமர்சனம்.!

சென்னை : முன்னாள் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு, ஜெயலலிதாவின் 1998-ல் பாஜக ஆட்சியைக் கவிழ்க்க எடுத்த முடிவு "வரலாற்றுப்…

2 hours ago

ஜடேஜா வாஷிங்டனை சதம் அடிக்க விடாமல் அவுட் ஆக்கியிருக்கணும்..! நாதன் லயன் பேச்சு!

லண்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது.…

3 hours ago