விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் வரலாற்று படத்திலிருந்து விலக வேண்டும் – சீமான்!

Published by
Rebekal

விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் வரலாற்று படத்திலிருந்து விலக வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். 

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தில் தற்போது விஜய் சேதுபதி அவர்கள் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் முரளிதரன் சிங்களவர்களுக்கு சாதகமாவர் எனவும் திட்டமிட்ட அரசின் இனப்படுகொலையை அவர் நியாயப்படுத்திக் கூறிய ஒருவர் என்பதாலும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்திற்கு பல்வேறு அரசியல் அமைப்புத் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படத்தில் தம்பி விஜய் சேதுபதி நடிப்பது அவரது திரையுலக வாழ்க்கைக்கு நல்லதல்ல; எனவே உடனடியாக அப்படத்தில் இருந்து விலகும் முடிவை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் முத்தையா முரளிதரன் பற்றி தம்பிக்கு நாம் சொல்லத் தேவை இருக்காது அவரே புரிந்து கொண்டு படத்தில் இருந்து விலகுவார் என தான் நான் அமைதி காத்தேன். ஆனால் படத்தினுடைய அடுத்த கட்ட பணிகள் தொடங்கியிருப்பதால் தம்பிக்கு அன்போடு அறிவுறுத்துகிறேன், முத்தையா ஒரு விளையாட்டு வீரன் மட்டுமல்லாமல் உலகளாவிய புகழ் வெளிச்சத்தை கொண்டு சிங்கள அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையும், இன ஒதுக்கல் கொள்கையையும் நியாயப்படுத்தி பேசியவர். தமிழர் என்ற இன அடையாளத்தை பயன்படுத்தும் சிங்களப் பேரினவாதத்தின் கைக்கூலியாக இருந்து வருபவர், 2 லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு,  பிணக் காடாய் மாறி ரத்த சகதியில் எம் உறவுகளின் உடல்களும் மரண ஓலங்களும் கேட்ட நொடிப்பொழுதில் எவ்வித தயக்கமும், குற்றமும் இன்றி இனவழிப்பு செய்யப்பட்ட நாளை மகிழ்ச்சிகரமான நாளாக கருதுகிறேன் என அறிவித்தவர் முத்தையா. இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்சே நல்லாட்சி தருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதனால் இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் முரளிதரன் உட்பட எவருமே தமிழகத்தில் விளையாடுவதற்கு முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் தடை விதித்திருந்தது தம்பி சேதுபதி அறியாததா? அதுவெல்லாம் தெரிந்திருந்தும், முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படத்தில் நடிக்க முன் வந்ததை எப்படி நம்மால் ஏற்க முடியும்? அது வரும் காலங்களில் விஜய் சேதுபதியின் மற்ற படங்கள் வெளியிடுவதில் சிக்கலை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார். எனவே தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து படத்தில் இருந்து முற்றிலுமாக விலகுகிறேன் எனும் அறிவிப்பை விஜய் சேதுபதி வெளியிட வேண்டும் என அன்போடு அறிவுறுத்துகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட  இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…

3 hours ago

எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…

4 hours ago

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு! தமிழக அரசு உத்தரவு!

சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…

5 hours ago

ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…

5 hours ago

பாமக மோதல் : பொறுப்பை பறித்த அன்புமணி… “அவருக்கு அதிகாரமில்லை” டென்ஷனான அருள்!

பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…

6 hours ago

த.வெ.க தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் எப்போது சுற்றுப்பயணம்? ஆதவ் அர்ஜுனா முக்கிய தகவல்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…

7 hours ago