அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்த வேண்டும் – மத்திய அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்!

Published by
Rebekal

போர்க்கால அடிப்படையில் கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக செலுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் வலியுறுத்தி உள்ளார்.

நாடு முழுவதிலும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அனைவரும் தடுப்புச் எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறப்பட்டாலும் தடுப்பூசிகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமலேயே இருக்கின்றனர். இந்நிலையில் இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் போர்கால அடிப்படையில் மத்திய அரசு தடுப்பூசிகளை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீபகாலமாக கொரோனா அதிகரித்து வரும் நிலையில் ஏற்கனவே சிகிச்சைக்கு பயன்படக்கூடிய ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வருவது தனக்கு வேதனை அளிப்பதாக கூறியுள்ளார். மேலும் கொரோனாவை கட்டுப்படுத்தக்கூடிய தடுப்பூசிக்கு தயாரிப்பு நிறுவனங்களே விலை நிர்ணயம் செய்வது ஏற்கத்தக்கது அல்ல எனவும், மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆக்சிஜன் மற்றும் தடுப்புசி பற்றாக்குறையைப் போக்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மத்திய மாநில அரசுகளுடன் ஒன்றிணைந்து மக்களும் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ள அவர், கொரோனா இல்லாத இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Recent Posts

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

2 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

2 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

5 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

5 hours ago

“நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்” – டிரம்பின் வைரல் பதிவு.!

நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…

5 hours ago

“என்னை கொலை செய்ய சதி?” மதுரை ஆதீனம் பரபரப்பு குற்றசாட்டு!

சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…

5 hours ago