விஜயின் அரசியல் பயணம்… பெரியார், காமராஜர், அம்பேத்கரை குறிப்பிட்டது மகிழ்ச்சியளிக்கிறது.! சத்யராஜ் பேச்சு.!

Published by
பாலா கலியமூர்த்தி

விஜய் அரசியலுக்கு வருவது பற்றி எனக்கு தெரியாது என்று கோவையில் நடிகர் சத்யராஜ் பேட்டி.

கோவையில் தனியார் அழகு நிலையத்தை திறந்து வைத்த பின், விஜய்யின் கல்வி விருது நிகழ்வு குறித்த கேள்விகளை செய்தியாளர்கள் நடிகர் சத்யராஜிடம் முன்வைத்தனர். இதற்கு பதிலளித்து பேசிய சத்யராஜ், பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கல்விக்கு உதவி செய்தது மிகவும் நல்ல விஷயம். அரசியலுக்கு வருவது பற்றி அவரே வெளிப்படையாக சொல்லாதபோது நான் அது குறித்து பேசுவது நன்றாக இருக்காது.

இதனால் அவர் அரசியலுக்கு வருவது பற்றி எனக்கு தெரியாது. பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகிய தலைவர்களை முன்னுதாரணமாக வைத்து பேசியது மகிழ்ச்சியாக உள்ளது. அதுவும், இளைய தலைமுறையின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ள நடிகர் விஜய் இதை கூறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வகையில் உள்ளது எனவும் கூறினார்.

மேலும், ‘லியோ’ பட போஸ்டரில் விஜய் புகைபிடிப்பது போன்ற புகைப்படம் இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், நடிகர்கள், தாங்கள் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்துக்கு ஏற்ப சில விஷயங்களை செய்து தான் ஆகவேண்டும். நான் இப்போது வில்லனாக நடித்திருக்கும் ஒரு படத்தில் கூட புகைப்பிடிக்கும் காட்சியில் நடிக்க வேண்டியிருந்தது. இதனால் நடிப்பு வேறு தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்றார்.

நடிகர் விஜய், நேற்று முன்தினம் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்கினார். இவ்விழாவில் பேசிய நடிகர் விஜய், கல்விதான் பறிக்க முடியாத சொத்து, அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும், ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது உள்ளிட்ட கல்வி மற்றும் அரசியல் குறித்து பேசியிருந்தார்.

கல்வி விருது விழா, விஜயின் அரசியல் பேச்சு உள்ளிட்டவை குறித்து பார்க்கும்போது, நடிகர் விஜய் விரைவில் அரசியல்  களத்தில் குதிப்பார் என எதிர்பார்க்கபடுகிறது. அதுபோல் தான் அவரின் செயல்பாடுகள் உள்ளது என்கின்றனர். கல்வி விருது விழாவில் அவரின் பேச்சு குறித்தும், கல்வி விருது குறித்தும் பலரும் ஒரு பக்கம் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மறுபக்கம், விஜயின் இந்த செயல், அரசியல் களத்திற்கு போட்ட விதை என்றும் கூறி வருகின்றனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…

9 minutes ago

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…

35 minutes ago

இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

ஸ்ரீநகர் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

1 hour ago

“அவர் பொறுப்பாக நடந்திருக்க வேண்டும்”- பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!

டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…

1 hour ago

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…

2 hours ago

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

2 hours ago