விருதுநகர் வெடிவிபத்து – FIRஇல் வெளியான திடுக்கிடும் தகவல்கள்.!

Published by
கெளதம்

Virudhunagar : வெடிமருந்து வேன்களை அருகருகே வைத்து, வெடிமருந்துகளை இறக்கியதே விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் பகுதியில் செயல்பட்டு வந்த கல்குவாரியில் நேற்று (மே 1) நடந்த வெடிவிபத்தில், குருசாமி, கந்தசாமி, துரை ஆகிய 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் இந்த வெடி விபத்தில் காயமடைந்தனர். பயங்கர சத்தத்துடன் ஏற்பட்ட விபத்தின் காரணமாக அருகில் உள்ள சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டது.

இந்த சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த பயங்கர வெடி விபத்து தொடர்பாக இதுவரை, சேது ராஜ்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ராம்ஜி, ராமமூர்த்தி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த வெடிவிபத்து தொடர்பாக, அப்பகுதி கிராம நிர்வாக அதிகாரி செல்வராஜ் அளித்த புகாரின் பெயரில், FIR பதியப்பட்டது. விருதுநகர் காவல்துறையினர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில், பல்வேறு அதிர்சசி தகவல்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதாவது, டெட்டனேட்டர் எனும் வெடிமருந்து இருந்த வேன் மற்றும் நைட்ரஜன் இருந்த வேன் என இரு வெடிமருந்து இருந்த வாகனங்களும் அருகருகே வைத்து, அதில் இருந்து வெடிபொருட்களை தொழிலாளர்கள் இறக்கிய போது இந்த கோர விபத்து நேர்ந்ததாக FIRஇல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி வெடிமருந்துகளை இறக்கியுள்ளனர் என்றும், உயிருக்கு ஆபத்து ஏற்படும் என தெரிந்தும் பாதுகாப்பற்ற முறையில் வெடிமருந்துகளைக் கையாண்டதும் விசாரணையில் தெரிய வந்துளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வெடி விபத்து தொடர்பாக மனித உயிருக்கு ஆபத்து விளைவித்தல் , பாதுகாப்பற்ற முறையில் ஆபத்தான பொருட்களை கையாளுதல், பாதுகாப்பு குறைபாடு உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

வெடிவிபத்தில் சிதறிய உடல்களை சுமார் 2 மணிநேரமாக மீட்புப்படையினர் தேடி பின்னர், அதனை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்த பிறகு இன்று அதிகாலை உறவினர்களிடம் உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. அப்போது, உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் சொன்ன தகவல்!

சென்னை : நேற்று காலை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை ஆழ்ந்த…

10 hours ago

“சாரித்திரம் புரட்டு போராட்டம் பல்லாயிரம்”…வலியிலும் வரலாறு படைத்த ரிஷப் பண்ட்!

மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…

10 hours ago

இன்ஸ்டா பிரபலம் இலக்கியா விவகாரம் : திலீப் சுப்பராயன் விளக்கம்!

சென்னை : இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா, ஜூலை 24, 2025 அன்று சென்னையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதற்கு தமிழ்…

11 hours ago

திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை வழக்கு : மேற்குவங்கத்தைச் சேர்ந்த இளைஞர் கைது!

சென்னை : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில், கடந்த ஜூலை 12, 2025 அன்று 8 வயது சிறுமி பள்ளி…

12 hours ago

திரைப்படமாக உருவாகும் ராமதாஸ் பயோபிக்..! படக்குழு வெளியிட்ட போஸ்ட்டர்கள்..!

சென்னை :  பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு, இயக்குநர் சேரன் இயக்கத்தில் ‘அய்யா’…

12 hours ago

பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை!

பீகார் :  மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் கீழ், இந்திய தேர்தல் ஆணையம் 65.20 லட்சம்…

13 hours ago