+2 தேர்ச்சி விகிதம்.! எந்த மாவட்டம் முதலிடம்.? எந்த மாவட்டம் கடைசி இடம்.?

Published by
மணிகண்டன்

+2 பள்ளி தேர்ச்சி விகித அடிப்படையில் முதலிலத்தில் விருதுநகர் மாவட்டம் உள்ளது. கடைசி இடத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் உள்ளது. 

தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் +2 வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று முடிந்தது. இந்த பொதுத்தேர்வினை 8.17 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. பதிவெண், பிறந்த தேதி கொண்டு மாணவ மாணவியர்கள் தங்கள் மதிப்பெண்களை அறிந்து வருகின்றனர்.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 94.03% பேர் தேர்ச்சி எனவும், அதில் மாணவிகள் 96.38% பேரும், மாணவர்கள் 91.45% பேரும் தேர்ச்சி என பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

இதில் மாவட்ட வாரியாக +2 தேர்ச்சி விகிதம் அடிப்படையில், விருதுநகர் 97.85 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் திருப்பூர் மாவட்டம் 97.79 சதவீதத்துடனும், பெரம்பலூர் 97.59 சதவீதத்துடன் 3ஆம் இடத்திலும் உள்ளது.

நான்காம் இடத்தில் கோவை 97.57 சதேவீதத்துடனும், தூத்துக்குடி மாவட்டம் 97.37 சதவீதத்துடன் 5ஆம் இடத்திலும் உள்ளது. 6ஆம் இடத்தில், சிவகங்கை 97.26 சதவீதத்துடனும், அடுத்தடுத்த இடங்களில் கன்னியகுமரி 97.05 சதவீததுடன் ஆட்டுத்த இடத்திலும், தலைநகர் சென்னை 94.14 சதவீத தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளது. மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதத்தில் ராணிப்பேட்டை 87.30 சதவீதத்துடன் கடைசி இடம் பிடித்துள்ளது.

அரசு பள்ளியில் அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டமாக திருப்பூர் அமைந்துள்ளது. அங்கு, அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 96.45 சதவீதமாகும். பள்ளிகள் வாரியாக, பெண்கள் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் 96.04 சதவீதம் எனவும், இருபாலர் பள்ளியானது 94.39 சதவீத தேர்ச்சி எனவும், ஆண்கள் பள்ளிகள் 87.79 சதவீத தேர்ச்சி எனவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதமானது 89.80 சதவீதம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

சீன மற்றும் துருக்கி ஊடகங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி.!

டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…

7 minutes ago

DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!

சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…

57 minutes ago

என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…

1 hour ago

40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!

சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…

2 hours ago

எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…

2 hours ago

ராணுவ கர்னல் குறித்து சர்ச்சைப் பேச்சு – மன்னிப்பு கேட்ட விஜய் ஷா.!

டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…

2 hours ago