President Droupati Murmu - Tamilnadu CM MK Stalin [File Image]
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று மாலை பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் வரவேற்றனர். உடன் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, சென்னை மேயர் பிரியா ஆகியர் உடன் இருந்தனர்.
இதனை தொடர்ந்து ஏற்கனவே திட்டமிட்டு இருந்தது போல சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தங்கினார். இதனை தொடர்ந்து இன்று காலை 9:00 மணிக்கு சில முக்கிய பிரமுகர்களை சந்திக்க உள்ளார்.
ஆளுநர் மாளிகை பெட்ரோல் குண்டுவீச்சு.! கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்த பாஜக வக்கீல்.?
அதன் பிறகு இந்திய கடல்சார் பல்கலைகழகத்தின் 8வது பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு காலை 11 மணி அளவில் கலந்து கொள்ள உள்ளார். அங்கு மாணவர்களுக்கு பட்டம் வழங்க உள்ளார்.
இந்த விழா முடிந்து நண்பகல் 12 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னையிலிருந்து டெல்லி செல்ல உள்ளார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் வருகையை ஒட்டி சென்னை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
சென்னை : தமிழ்நாடு அரசு 2023-ஆம் ஆண்டு முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை (கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்)…
சென்னை : தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அது என்னவென்றால், நடன இயக்குனர்கள் சங்கத்தின்…
சென்னை : தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சராகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தலைவராகவும் பணியாற்றிய கலைஞர் மு. கருணாநிதியின் பிறந்த…
நார்வே : செஸ் 2025-ல இந்திய வீரர் டி. குகேஷ், உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை…
அகமதாபாத் : ஐபிஎல் 2025 கோலாகலமாக நடந்து முடிந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று (ஜூன் 3)-ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில்…
கர்நாடகா : சென்னையில் நடந்த 'தக் லைஃப்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், "கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது" என்று நடிகர்…