சிறையில் சொகுசு வசதி:இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் சசிகலா ஆஜர்!

Published by
Edison

பரப்பன அக்ரஹாரா சிறையில் சொகுசு வசதிகள் பெற ரூ.2 கோடி வரை லஞ்சம் கொடுத்த வழக்கில் வி.கே.சசிகலா இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா,கடந்த ஆண்டு விடுதலை பெற்று வெளியே வந்தார்.இதனிடையே சிறையில் இருந்தபோது தனக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுப்பதற்காக பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி வரை லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால்,சசிகலா லஞ்சம் கொடுத்தது தொடர்பாக பெங்களூரு ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனையடுத்து,இந்த வழக்கில் டாக்டர் அனிதா,அக்ரஹாரா சிறை சூப்பிரண்டாக இருந்த கிருஷ்ணகுமார்,அதிகாரிகள் கஜராஜ் மாகனூர்,சுரேஷ் ஆகிய 4 பேர் மீது விசாரணை நடத்த கர்நாடக அரசு அனுமதி வழங்கியது.

இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்திய நிலையில்,கடந்த ஜனவரி மாதம் 7 ஆம் தேதி பெங்களூரு மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில்,இந்த வழக்கு தொடர்பாக பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு விசாரணை நடைபெற உள்ளது.சசிகலா, இளவரசி உள்பட 7 பேரும் விசாரணைக்கு ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அவர்கள் அனைவரும் இன்று விசாரணைக்கு ஆஜராகவுள்ளனர்.

அந்த வகையில்,சசிகலா மற்றும் இளவரசியும் இன்று அதிகாலை சென்னையில் இருந்து பெங்களூரு சென்றுள்ளனர்.இதனைத் தொடர்ந்து,அவர்கள் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளனர்.

Recent Posts

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…

3 hours ago

போர் எப்போது.? ”நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது” – டிரம்ப் சூசக பதில்.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…

3 hours ago

தமிழகம் முழுவதும் ஜூலை 9ம் தேதி டாஸ்மாக் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் பணியாளர் சங்கம்.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…

4 hours ago

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…

5 hours ago

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…

6 hours ago

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…

6 hours ago