[Photo Credit: THE HINDU / Special Arrangement]
புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை, இ-சேவை மையங்களின் மூலம் பெறும் வசதி நிறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை இனி – இ சேவை உள்ளிட்டவை மூலம் பெற இயலாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. புதிய வாக்காளர் அடையாள அட்டை குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, தமிழகத்தில் புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை, இ-சேவை மையங்களின் மூலம் பெறும் வசதி நிறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
புதிய வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. வாக்காளர் அடையாள அட்டைகள், அரசின் இ-சேவை மையங்கள் மற்றும் இணைய சேவை மையங்களில் பெறும் வசதி இருந்து வந்தது. போலி அட்டைகளைத் தடுக்கும் வகையில், இனி வாக்காளர் அடையாள அட்டையை இனி தேர்தல் ஆணையமே வழங்கும். புதிய வாக்காளர் அடையாள அட்டைகளில் ஹோலோகிராம், கோஸ்ட் இமேஜ், க்யூ ஆர் கோடு போன்ற நவீன வசதிகள் உள்ளதால், இந்த அட்டைகளை இ-சேவை மையங்களால் அச்சிட்டு வழங்க இயலாது என்பதால், தேர்தல் ஆணையமே இனி நேரடியாக வழங்க முடிவெடுத்துள்ளது.
அதன்படி, இனி வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து, தபால் மூலம் மட்டுமே பெற முடியும் என தெரிவித்தார். வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்பவர்களுக்கு முன்னுரிமை அளித்து வாக்காளர் அடையாள அட்டை அளிக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வாக்காளர் அட்டை தொலைந்தாலோ, சேதம் அடைந்தாலோ தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் ஆண்டில் 4 காலாண்டிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் ஆகியவை நடைபெற்று வருகிறது எனவும் கூறியுள்ளார்.
சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து…
சென்னை : இந்திய டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு…
சென்னை : தமிழ்நாட்டில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த…
விழுப்புரம் : மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…
சென்னை : சென்னையில் டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசாகன் வீடு உள்பட 5 இடங்களில் ED அதிகாரிகள் சோதனை…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லப்போகிறது எந்த அணி கோப்பையை வெல்ல போகிறது…