உங்கள் கோபத்தை ரசிக்கிறோம்.! ஆளுநர் ரவி பேச்சுக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் விமர்சனம்.!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழக ஆளுநர் ரவியின் கோபத்தை ரசிக்கிறோம் என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் விமர்சனம்.

ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த ஆளுநர் என்ஆர் ரவி, தமிழ் மக்கள் மிகவும் பண்பட்டவர்கள், ஆழ்ந்த ஆன்மிக உணர்வும், விருந்தோம்பல் பண்பும் கொண்டவர்கள். தமிழ்நாட்டில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததை பாக்கியமாக உணர்கிறேன். இங்குள்ள மக்களுக்கும், அரசியலுக்கும் டையே நிறைய வேறுபாடு தெரிகிறது. தமிழ்நாடு அரசியலில் நாகரியத்தையும், கண்ணியத்தையும் எதிர்பார்க்க முடியாது, ஆனால், தமிழ்நாட்டு மக்களிடம் அவற்றை பெற முடியும் என்றார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அவர், திராவிட மாடல் எனும் காலாவதியான ஐடியா, இந்தியாவின் ஒரே நாடு ஒரே கொள்கைக்கு எதிரானது. காலாவதியான ஒரு கொள்கையை உயிர்ப்புடன் வைக்க மேற்கொள்ளப்படும் முயற்சி இது. ஆனால் எனக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே நல்ல உறவு இருக்கிறது. ஆளுநர் தனது அதிகாரத்தை மீறி எல்லை தாண்டி செயல்படுகிறார் என்று திமுக அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டு பொய்யானது. ஆளுநருக்கு என்று ஒரே ஒரு எல்லை தான் இருக்கிறது. அந்த எல்லை என்பது அரசியல் சாசனத்தால் வகுக்கப்பட்டது.

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை அறிந்தும் நான் எப்படி சட்டப்பேரவையில் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று கூற முடியும். கள்ளக்குறிச்சி கலவரம், கோவை கார் வெடிப்பு, வி.ஏ.ஓ படுகொலை போன்றவை நடக்கும் போது, தமிழ்நாடு எப்படி அமைதிப்பூங்காவாகும்? என கேள்வி எழுப்பினார். மேலும், ஆளுநர் மாளிகை செலவீனங்கள் குறித்து பேசிய தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை எனவும் தெரிவித்தார். எனவே, ஆளுநர் பேட்டி தான் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேச தொடங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், தமிழக ஆளுநர் ரவியின் கோபத்தை ரசிப்பதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், திராவிட மாடல் செத்துப் போன தத்துவம், மார்க்சியம் இந்தியாவை சிதைத்துவிட்டது, பரிணாமக்கோட்பாடு மேற்கத்திய அடிமைத்தனம் என்று சொல்லும் ஆளுநர் அவர்களே, களைகளுக்கு கோடாலிகள் மீது கோபம் வருவது இயற்கை தான் என்பதை நாங்கள் அறிவோம். உங்கள் கோபத்தை ரசிக்கிறோம் என விமர்சித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

34 minutes ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

56 minutes ago

இந்தியாவின் பாதுகாப்பை 10 செயற்கைக்கோள்கள் மூலம் 24×7 கண்காணிக்கிறோம் – இஸ்ரோ.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…

1 hour ago

தி.நகர் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து.., போராடும் தீயணைப்பு வீரர்கள்.!

சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…

2 hours ago

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர்  செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…

2 hours ago

கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…

3 hours ago