கொரோனா காரணமாக ஊரடங்கு உள்ளது.ஆனால் 3-வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.
இதன் விளைவாக ஆந்திரா,கர்நாடகா,டெல்லி,மகாராஷ்டிரா உள்ளிட்ட இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது.கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பின்னர் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் மதுபானங்களை வாங்க மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து வாங்கி சென்றனர்.ஆனால் இந்த சமயத்தில் பல இடங்களில் சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியாக அமைந்தது.
இதற்கு இடையில் தான் தமிழகத்தில் வருகின்ற 7-ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தடைசெய்யப்படாத பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் திறக்க அனுமதி அளித்தது.ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் கூட அனுமதியில்லை என்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது என்று அறிவித்தது.ஆனால் தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தேமுதிகவின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,டாஸ்மாக் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடினால் மக்களுக்கும், நாட்டிற்கும் நல்லது ஏற்பட வாய்ப்புள்ளது. கடைகளை மே 7-ஆம் தேதி திறக்கும் முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…