கருவறை இருட்டு போல இருப்பாய் என நினைத்தோம்! கல்லறை இருட்டாய் மாறுமென நினைக்கவில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்

Published by
லீனா

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த 25-ஆம் தேதி மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். குழந்தையின் உடலை மீட்க நான்கு நாட்களாக போராடிய நிலையில், இவர்களது முயற்சி தோல்வியில் முடிந்தது.
5-வது நாள் அதிகாலையில் குழந்தையை சடலமாக தான் மீட்டெடுத்தார்கள். குழந்தை மீண்டு வருவான் என்ற எதிர்பார்த்தவர்கள் அனைவரும் இன்று, கடவுளிடம் சென்று வா குழந்தாய்! என கூறும் நிலைக்கு தள்ளபட்டுள்ளனர்.
குழந்தையை மீட்கும் பணி நடைபெறும் இடத்தில் அமைச்சர் விஜய் பாஸ்கரும் உடனிருந்து, எப்படியாவது குழந்தையை மீட்டு விட வேண்டும் என போராடினர். ஆனால், யாருடைய முயற்சியும் வெற்றி பெறாத நிலையில், குழந்தை சுஜித் மரணம் குறித்து அமைச்சர் விஜய் பாஸ்கர் அவர்கள் பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், ‘ மனதை தேற்றிக் கொள்கிறேன். ஏனென்றால், இனி நீ கடவுளின் குழந்தை. கருவறை இருட்டு போல் இருப்பாய் என நினைத்தோம். கல்லறை இருட்டாய் மாறுமென நினைக்கவில்லை. எப்படியும் வந்துவிடுவாய் என்றுதான், ஊனின்றி, உறக்கமின்றி இரவுப்பகலாய் இமை மூடாமல் உழைத்தோம். இப்படி என்னை புலம்பி அழ விடுவாய் என எண்ணவில்லை.’ என்று உருக்கமாக பேசியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

ஒவ்வொரு 80 ஓவர்களுக்கும் 3 முறை பந்து மாற்றனும்…ஜோ ரூட் சொன்ன யோசனை!

ஒவ்வொரு 80 ஓவர்களுக்கும் 3 முறை பந்து மாற்றனும்…ஜோ ரூட் சொன்ன யோசனை!

லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…

9 hours ago

ஒட்டு கேட்கும் கருவி விவகாரம் : யார் மீது சந்தேகம்?-ராமதாஸ் சொன்ன பதில்!

விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…

10 hours ago

பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கை முறை – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…

10 hours ago

த.வெ.கவின் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பா? விளக்கம் கொடுத்த சென்னை கமிஷனர்!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…

11 hours ago

கேஸ் போட்ட இளையராஜா..”அவுங்க வீட்டுக்கு மருமகளா போகவேண்டியது நான்”..வனிதா குமுறல்!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…

12 hours ago

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் என்ன? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…

14 hours ago