உள்ளாட்சித்தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்- திருமாவளவன்..!

Published by
murugan

ஊரக உள்ளாட்சித்தேர்தலில் விசிக தனிச்சின்னத்தில் போட்டியிடும் என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துகொண்ட காட்பாடி மாணவி சௌந்தர்யாவின் குடும்பத்தினரை எம்.பி தொல்.திருமாவளவன் நேரில் ஆறுதல் கூறி மாணவி திருவுருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.  பின்னர், செய்தியாளார்களிடம் பேசிய அவர், நீட் தேர்வில் உள்ள மைனஸ் மார்க் எனப்படுவது மாணவர்களை அச்சுறுத்துகிறது.

நீட் தேர்வுக்காக 17 பேரை பலிகொடுத்துள்ளோம். தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு குடியரசு தலைவர் விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என கூறினார். மேலும், உள்ளாட்சி தேர்தலில் எதிர்பார்த்த அளவு இடங்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை. நல்லிணக்கமான பேச்சுவார்த்தை ஆறுதல் அளிக்கிறது. தனிச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என கூறினார்.

ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இடங்களுக்கு தென்னைமர சின்னத்திலும், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் இடங்களுக்கு கைக்கடிகாரம் சின்னத்திலும் போட்டியிடுவதாக கூறினார்.

Recent Posts

போதைப்பொருள் வழக்கு: ‘நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஜாமீன்’ – உயர் நீதிமன்றம்.!

போதைப்பொருள் வழக்கு: ‘நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஜாமீன்’ – உயர் நீதிமன்றம்.!

சென்னை : போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.…

19 minutes ago

ஜூலை 18-ல் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்.!

சென்னை : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18ம்…

40 minutes ago

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்தில் இதுவரை நடந்தது என்ன.?

கடலூர் : கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை 7:40 மணியளவில் தனியார் பள்ளி வேன் ஒன்று…

54 minutes ago

அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க பாமக செயற்குழுவில் தீர்மானம்.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…

1 hour ago

UAE கோல்டன் விசா: இந்தியர்களுக்கு வாழ்நாள் முழுவதும் குடும்பத்துடன் வாழ அரிய வாய்ப்பு!

எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம்…

2 hours ago

கடலூர் விபத்து : “மக்கள் கொடுத்த அழுத்தத்தால் கேட்டை கீப்பர் திறந்திருக்கிறார்”..அன்பழகன் பேச்சு!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8,…

3 hours ago