இடைத் தேர்தலில் தவெக போட்டியா – புஸ்ஸி ஆனந்த் சொல்வதென்ன?

Published by
கெளதம்

சென்னை : நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்‌’ கட்சி தொடங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்ததோடு, 2026 தான் எங்கள் இலக்கு. தேர்தல் ஆணையத்திடம் இருந்து 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, சின்னம், கொடி, சித்தாந்தங்கள், கொள்கைகள் ஆகியவற்றை முடிவு செய்து, மக்களைச் சந்திக்க உள்ளோம் என அறிவித்தனர்.

அதன்படி, நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை, போட்டியிடும் எந்த கட்சிக்கும் ஆதரவளிக்கவில்லை என ஏற்கனவே அறிவித்திருந்தனர். ஆனால், மக்களவை தேர்தலும் வெற்றி பெற்ற சில முக்கிய தலைவர்களுக்கு தவெக தலைவர் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத நடிகர் விஜய்யின் தவெக கட்சி, ஜூலை 10ஆம் தேதி நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுமா? என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், இந்த இடைத்தேர்தலில் தவெக போட்டியிடப் போவதில்லை என அக்கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், “2026 வரை மக்கள் பணி மட்டுமே செய்வோம் என்றும், மக்களும், கட்சி நிர்வாகிகளும் குழப்பிக் கொள்ள வேண்டாம்” எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

Published by
கெளதம்

Recent Posts

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

9 hours ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

9 hours ago

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

10 hours ago

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

11 hours ago

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

11 hours ago

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

11 hours ago