தமிழக அரசு வேல் யாத்திரைக்கு மறுப்பு தெரிவித்ததற்கான காரணம் என்ன?

Published by
லீனா

தமிழக அரசு வேல் யாத்திரைக்கு மறுப்பு தெரிவித்ததற்கான காரணம்.

திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர்-6ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, சென்னையை சேர்ந்த பத்திரிக்கையாளர்களான, பாலமுருகன் மற்றும் செந்தில் குமார் ஆகியோர் இந்த யாத்திரைக்கு தடை விதிக்க கோரி தனித்தனியாக வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அவர்கள் அளித்துள்ள மனுவில், கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தி, மொகரம் போன்ற பண்டிகைகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், ஒரு மாத காலமளவும், வேல் யாத்திரை நடத்தப்படும் பட்சத்தில், 3,000 – 5,000 பேர் கூட இருப்பதால், கொரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்து பெண்கள் குறித்து திருமாவளவன் பேசிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜகவினர் முன்னெடுத்த போராட்டங்களில் சட்ட ஒழுங்கு போராட்டக்களை சுட்டி காட்டி, அதுபோன்ற சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட்ட வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த யாத்திரைக்கு அனுமதி வாழங்கப்பட்டால், கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு, மருத்துவர்கள் மற்றும் பல துறை ஊழியர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வீணாகும் என்றும், யாத்திரை முடியும் நாளான டிச.6ம் தேதி, பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் என்பதால், இதன் காரணமாகவும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில், இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க கோரி முறையிடப்பட்ட நிலையில், இதனை ஏற்று செந்தில் குமாரின் மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கொரோனா 2, 3-வது அலைக்கான அச்சுறுத்தல் உள்ளதால், பராஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது என உயர்நீதிமன்றத்தில்  தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்த யாத்திரையால், மத கலவரங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
லீனா

Recent Posts

“நான் சம்பாதித்து சொந்த காசுல எடுத்த படம்”…ஹீரோயினாக களமிறங்கும் ஜோவிகா!

“நான் சம்பாதித்து சொந்த காசுல எடுத்த படம்”…ஹீரோயினாக களமிறங்கும் ஜோவிகா!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவரும், நடிகை வனிதாவின் மகளுமான ஜோவிகா விஜயகுமார் நடிகையாகவும், தயாரிப்பாளாகவும் களமிறங்கியுள்ளார்.…

7 hours ago

அதிக தொகைக்கு எடுக்கப்பட்டு மோசமாக விளையாடிய 7 வீரர்கள்…கழட்டிவிட திட்டம் போட்ட அணி நிர்வாகங்கள்?

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், பல வீரர்கள் இதுவரை சிறப்பாக விளையாடி நாம் பார்த்திருந்தோம்.…

8 hours ago

இன்று இந்த 2 மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்…எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்!

சென்னை : இன்று (27-05-2025) ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது மெதுவாக…

9 hours ago

மாநிலங்களவை சீட்? அதிமுகவின் முடிவிற்காக காத்திருக்கும் தேமுதிக..!

சென்னை : தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி பதவிகளுக்கு வருகின்ற ஜூன் மாதம் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில்…

9 hours ago

நிர்கதியாக நிற்கும் மக்களுக்கு உதவுவது குற்றமா? த.வெ.க தலைவர் விஜய் காட்டம்!

சென்னை : வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் பல குடிசைகள் தீக்கிரையாகியுள்ளன. தீயணைப்புத் துறையினர் விரைந்து…

9 hours ago

எடப்பாடி பழனிசாமிக்கு பதில் கூறி எனது தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை – முதல்வர் ஸ்டாலின் பதிலடி!

சென்னை : கடந்த 24ம் தேதி வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு…

11 hours ago